அவ்வையார் அருளிய நல்வழி

அவ்வையார் அருளிய நல்வழி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 150ரூ.

வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அவ்வையார் கூறி சென்ற வழியில் தெளிவு காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடையளிக்கும் நூல் இது. பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் 41 தலைப்புகளில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் செயல்களை எளிமையான நடையில் தந்துள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள தத்துவ கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனித மாண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அவ்வையார் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும்.  

—-

 

திருப்பம் தரும் திருக்கோயில்கள், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.

தமிழ்நாட்டின் 30 ஆலயங்களின் சிறப்பை விளக்கும் நூல். இவற்றில் பெரும்பாலானவை பலரும் அறிந்திராதவை என்றாலும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவை. படங்களுடன் கோவில்களின் சிறப்பை அழகாக விளக்கியுள்ளார் பனையபுரம் அதியமான்.  

—-

 

நடைபாதை கீதை, தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், 50, காமாட்சி அம்மன் கோவில் தெரு, புதுச்சேரி 1, விலை 200ரூ.

நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான விவரங்களை தத்துவங்களாகவும், அறிவுரைகளாகவும் கூறியுள்ளார். இடையிடையே ஆன்மிக கருத்துக்களும் உள்ளன. இந்நூலை முழுமையாக உணர்ந்து படித்தால் மனதிற்கு அமைதி நிச்சயம் கிடைக்கும். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.

Leave a Reply

Your email address will not be published.