இன்று ஒரு தகவல் (தொகுதி 1, 2)
இன்று ஒரு தகவல் (1, 2), தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, பெருங்குடி, சென்னை 96, இரு பகுதிகள் விலை ரூ. 600, 750.
வானொலி சகாப்தத்தில், இன்று ஒரு தகவல் மூலம் அனைவரது உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். அவர் மறைவுக்குப் பின் அவரது ஆழ்ந்த கருத்துக்கள் தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்ற கருத்தில், இந்தப் படைப்புகள் சிறப்பாக வெளிவந்திருக்கின்றன. வளமான வாழ்வுக்கு சிறந்த கருத்துக்களை படிக்க விரும்புவோர் இந்த நூற்களை வாங்கலாம்.
—-
மதி புத்தி, ஐயைந்து மகான்கள் (பாகம் 3), சித்தர்கள் கண்ட மவுனம்(பாகம் 2), திறந்த சொர்க்கம், சின்ன சின்ன விஷயம், தவத்திரு ஓங்காரனந்தா, ஓங்காரம், எம். 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை 80, விலை ரூ 175, 125, 175, 250, 100.(ஒவ்வொன்றும்) அன்பு, சந்தோஷத்தை வலியுறுத்தும் சுவாமிகள் தமிழகத்தில் நன்கு அறிமுகமானவர். மக்களுக்கு அமைதி கிடைக்க நடைமுறை வாழ்வில் பின்பற்ற வேண்டியதை ஆன்மிகக் கருத்தாக அளிப்பவர். அவற்றை இந்த நூல்களில் தருகிறார். ஆன்மிகம் என்றதும் நடைமுறை வாழ்க்கை கலவாததது என யாரும் எண்ண வேண்டாம்.. மாங்கல்யத்தைக் கடகடவெனச் சுற்றுவது, மாங்கல்யத்தை வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு ஆணியில் மாட்டுவது, குழந்தைகளை போட்டு தாண்டுவது, இவை சின்னத் திரையில் வரும் காட்சிகள். இது ஒழுங்கீனக் கல்வியை பரப்பும் இதை தவிர்ப்பது மனித குலத்திற்கு நாம் செய்யும் பேருதவியாகும். (மதி புத்தி நூலில் 255ம் பக்க தகவல்) இத்தகைய சாடல்கள் பலவும் இந்த அறிவுரைகளில் அடக்கம். நன்றி: தினமலர், 1/4/2012.