நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ.

இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015.

—-

வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ.

அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எளிய நடையில் தனது இயல்பான பேச்சில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் வானொலியில் தெரிவித்த இன்று ஒரு தகவல்களின் தொகுப்பு நூல். இது சிந்திக்கவும், சிரிக்கவும் தூண்டும் நூல் மட்டுமல்ல, பரிசளிக்க தகுந்ததுங்கூட. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.  

Leave a Reply

Your email address will not be published.