புலி தடம் தேடி

புலி தடம் தேடி, ரத்த ஈழத்தில் 25 நாட்கள், மகா. தமிழ்ப் பிரபாகரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 192, விலை 100ரூ. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக எந்த அளவுக்கு இனவெறித் தாண்டவமாடுகிறது என்பதை நூலாசிரியர் தோலுரித்துக் காட்டியுள்ளார். இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாகிய ஈழத்தமிழர்கள் தங்களது தாய் மண்ணிலேயே ராஜபட்சவின் இனவெறி அரசால், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, இன்று உணவுக்கே வழியில்லாமலும், உயிருக்கு உத்தரவாதமில்லாமலும் வாழ்வதை உலககுக்கு உரக்கத் தெரிவித்துள்ளார் நூலாசிரியர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் […]

Read more

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1, தந்தி பதிப்பகம், சென்னை. விலை 360ரூ. தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் என்ற மெகாத் தொடர் வெளியானபோது, அதில் தமிழ் சினிமா வரலாறு இடம் பெற்றது. சாதனை படைத்த படங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டும் அல்லாது, புகழ் பெற்ற கலைஞர்களின் வாழக்கை வரலாறுகள் அபூர்வமான புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டன. இதனால் பெரிதும் கவரப்பட்ட வாசகர்கள், சினிமா வரலாற்றை புத்தகமாக வெளியிடவேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இதனால், தமிழ் சினிமா வரலாற்றை 3 புத்தகங்களாக வெளியிட முடிவு செய்த தினத்தந்தி, […]

Read more

ஆரியம் திராவிடம் இந்தியம்

ஆரியம் திராவிடம் இந்தியம், வ. பாரத்வாஜர், காவ்யா, சென்னை, பக். 376, விலை 340ரூ. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின், வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நம் நாட்டில் ஆரியம், திராவிடம் என இரு பிரிவுகளாக இந்தியத் தத்துவ மரபுகள் விரிந்துகிடக்கின்றன. இந்நூல் கட்டுரைகளில் ஆரியம் குறித்தும், திராவிடம் குறித்தும் பேசப்படுகின்றது. இந்தியாவின் சமூகம், அரசியல், சமயம், கலாசாரம், மொழிகள், இனம், வரலாறு என எது குறித்தும் பேசினாலும் ஆரியம், திராவிடம் என இந்தியம் அதில் […]

Read more

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர் கி.அ.சச்சிதானந்தம், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 192, விலை 110ரூ. மௌனி தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் அசல் தொடக்கப்புள்ளி. அவர் எழுதி வெளிவந்துள்ள 24 சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. நுட்பமான பார்வைகள், மன விகசிப்புகள், துல்லியமான உணர்வுகள், வியக்க வைக்கும் படிமங்கள் இவைதான் மிகுதியும் இக்கதைகளில். தன்னைச் சந்திக்க வரும் நண்பனிடம் தனது காதல் அனுபவத்தை விவரிக்கும் அழியாச்சுடர் விரும்பாத நண்பனுடன் பயணம் செய்ய நேர்ந்துவிடும் ஒருவனின் மனவோட்டங்களைப் பதிவு செய்யும் அத்துவான வெளி, […]

Read more

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ. விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.   —- மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார். அத்துடன்கூட, மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் ஆன்மிக நூல்களையும், கருத்தூன்றிப் படித்திருக்கிறார். நிதானமாக உட்கார்ந்து சிந்தித்துவிட்டு, பகவத் கீதையின், 702 சுலோகங்களுக்கு எளிய தமிழ் நடையில் விளக்கம் (விரிவுரை? பாஷ்யம்?) எழுதியிருக்கிறார். ஏராளமான மேற்கோள்களைப் பொருத்தமான இடங்களில் சரியான விகிதத்தில் கோர்த்திருக்கிறார். மறக்காமல், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார். பகவன் ஸ்ரீ ராமகிருஷ்ணர், மகாகவி பாரதியார், […]

Read more

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, […]

Read more

சங்ககாலத் தொழில்நுட்பம்

சங்ககாலத் தொழில்நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், பக். 195, விலை 190ரூ. தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில் நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார். பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடறப்யணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். நிறைவு தலைப்பாக, […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, எஸ்.பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த்சென்ஸ், பக். 200, விலை 125ரூ. இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடிதான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர்வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது. கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த நீதிபதி திவத்தியா குழுவின் விசாரணை முடிவுகளில் முக்கியமானவற்றை ஆசிரியர் இதில் சேர்த்திருக்கிறார். மேலும் 1964 முதல் 2002 வரை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த […]

Read more

என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா, அமுதவன், விகடன் பிரசுரம், பக். 184, விலை 90ரூ. சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி. எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். -கேசி. நன்றி: தினமலர், 27/4/2014. […]

Read more
1 2 3 4 5 9