ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம்

ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம், நெல்லை கிருஷ்ணன், ராஜமரகம் வெளியீடு, விலை 400ரூ. மகாபாரத போர்க் களத்தில் ஆயுதம் ஏந்த தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதை கவி நாடக வடிவில் தரப்பட்டு இருக்கிறத. பகவத் கீதையை மட்டும் சொல்லாமல், போர்க்களம் தொடர்பான அத்தனை நிகழ்வுகளையும் நாடகமாக ஆக்கி இருக்கிறார் ஆசிரியர். திருதராஷ்டிரனுக்கும் சஞ்சயனுக்கும் இடையே நடைபெறும் விவாதம் தொடங்கி, பகவத் கீதை உபதேசம் உள்பட அத்தனை சம்பவங்களும் திறம்பட காட்சி ரூபம் ஆக்கப்பட்டு, எளியநடையிலான மரபுக் கவிதைகளாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. […]

Read more

உல்லாசத் திருமணம்

உல்லாசத் திருமணம், தஹர் பென் ஜெலூன், பிரெஞ்சிலிருந்து தமிழில்:சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு, விலை: ரூ.300 நிறப் பாகுபாட்டைப் பேசும் நாவல் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான தஹர் பென் ஜெலூனின் புதிய நாவலை ‘உல்லாசத் திருமணம்’ எனும் லைப்பில் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர். ஆங்கில வாசகர்களுக்கு இந்நாவல் அடுத்த ஆண்டின் மத்தியில்தான் கிடைக்கவிருக்கிறது. ‘உல்லாசத் திருமணம்’ நாவல் அடிப்படையில் நிறப் பாகுபாட்டைப் பேசுகிறது. நாவல் களத்தில், இஸ்லாம் வழக்கப்படி நான்கு பெண்களை மணப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமீரின் மனைவி லாலா […]

Read more

மெல்லத் திறந்தது கதவு

மெல்லத் திறந்தது கதவு, தமிழில்: எஸ்.விஜயன், முத்து காமிக்ஸ் வெளியீடு, விலை ரூ.100 இருண்மை மண்டிய கானகத்தின் கதைகள் காமிக்ஸ் புத்தகங்களில் சாகசம், கேளிக்கை போன்ற அம்சங்களுக்கு மட்டுமல்லாமல் மர்மத்துக்கும் தனி இடம் உண்டு. மங்கலான துர்க்கனவுகளையொத்த கதைப் பின்னல் கொண்ட கதைகள் காமிக்ஸ் உலகில் ஏராளம். பரவலாக அறியப்பட்ட எல்லா காமிக்ஸ் நாயகர்களும் இதுபோன்ற ஏதேனும் ஒரு கதையிலேனும் தோன்றியிருப்பார்கள். ‘மர்ம மனிதன்’ என்று அழைக்கப்படும் மார்ட்டின் இதற்கெனவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அவர் தோன்றும் ‘மெல்லத் திறந்தது கதவு’ திகிலூட்டும் ஓர் அறிவியல் […]

Read more

இந்திர நீலம்

இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150 இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள். சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் […]

Read more

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள், பாவெல் சக்தி, எதிர் வெளியீடு, விலை: ரூ.399 நீதித் துறையின் மீது ஒரு குறுக்கு விசாரணை எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து எளிய மனிதர்களும்கூடத் தங்களது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் பொன்விதிகளில் ஒன்று: ‘போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஆஸ்பத்திரி மூன்றுக்கும் மனிதன் போகக் கூடாது’. எழுத்தாளரும் வழக்கறிஞருமான பாவெல் சக்தி, பின்நவீனத்துவ எழுத்துக்காரர்களை இந்த மூன்றின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று இந்தக் கதைத் தொகுப்பின் வழியே அழைப்புவிடுத்திருக்கிறார். தொழிலின் […]

Read more

உயர்திணைப் பறவை

உயர்திணைப் பறவை, கதிர்பாரதி, இன்சொல் வெளியீடு, விலை: ரூ.260 கச்சிதங்களின் அழகு உபகரணங்கள் எளிதில் கிட்டுவதால், எல்லோருக்கும் எல்லாவற்றையும் செய்யும் சாத்தியம் உண்டு. எல்லோராலும் செய்யப்படுவதால் அது மலினமானதும் அல்ல. அவரவர்களின் மனநிறைவே அவர்களின் படைப்பின் தன்மையாக இருக்கும். அதேபோல, அடையாளப்படுத்துதல், உணரச்செய்தல் என்ற இரு நிலைகளை எடுத்துக்கொண்டால் உணரச்செய்யும் படைப்புகளே மனதில் நிற்பதாகத் தோன்றுவதுண்டு. சூரியனையும் நிலவையும் வரைவது எளிது. ஆனால், நிலவின் குளிர்ச்சியையும், சூரியனின் தகிப்பையும் நமக்குள் கடத்தப்படுதல் வேண்டும். தான் நம்பும் கலை மீது அதீதப் பிரியம் கொண்டவர்களால் மட்டுமே […]

Read more

இலக்கியச் சாதனையாளர்கள்

இலக்கியச் சாதனையாளர்கள், க.நா.சுப்ரமண்யம், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.175 க.நா.சு. வரைந்த உயிர்க்கோடுகள். நகுலன், ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்க முடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க.நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க.நா.சு.வால் அப்படி இருக்க முடிந்ததோடு அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் […]

Read more

பேய்ச்சி

பேய்ச்சி, ம.நவீன், வல்லினம், யாவரும் வெளியீடு, விலை 300ரூ. வசைச்சொற்கள் அளவுகோல் ஆகுமா? ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை (வெளியீடு: வல்லினம் பதிப்பகம், மலேசியா; யாவரும் பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு) மலேசிய அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. தடை கோரியவர்கள் சில தமிழ் எழுத்தாளர்கள்; தமிழ் அமைப்புகள் எனத் தெரிகிறது. தடை கோர முக்கியக் காரணம், இந்நாவலில் பாலுறுப்புகளையும் சாதியையும் குறிக்கும் வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது. பாத்திரங்களின் உரையாடலில் வசைகள் வருவதும் அவற்றில் பாலுறுப்பு, பாலுறவு தொடர்பானவை அமைவதும் இயல்பானதே. கீழ், மேல் என எதிரிடையைக் கொண்டது சாதியமைப்பு. […]

Read more

தாளடி

1967 தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை: ரூ.230 குடிசை நெருப்பில் குளிர்காயும் புனைவு ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் இலக்கிய மதிப்பீடுகளில் மட்டுமின்றி, அரசியல் கருத்துகளிலும் தனது மாறுபட்ட பார்வைகளைத் தயங்காது முன்வைப்பவர். சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் ‘1967 தாளடி’ நாவல், நேர்க்கோட்டு முறையைத் தவிர்த்து, கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிறது. பாத்திரங்களுக்கு இடையிலும் கூடுவிட்டுக் கூடுபாய்கிறது. நாட்டியம், ஓவிய நுண்கலைஞர்களின் மனவோட்டங்களையும் ரசிக மனோபாவங்களையும் விவரிக்கிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஹம்பிக்கும் அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் நாவல் பயணிக்கிறது. நிர்வாண ஓவியங்களை […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், அ.வெண்ணிலா, சாகித்ய அகாடமி, பக்.224, விலை 200ரூ. இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில் முத்தெடுத்துள்ளாள். ‘ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும், சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன. ஒரு நிறைவேறாத காதலின் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளியாய்த் தேங்கித் தளும்புகின்றன!’ என்ற கவிதை வரிகள், ‘தாய்மையின் ஊற்றுக் கண்ணாய் போற்றப்படும் முலைகள்’ பெண்ணுக்குத் தோன்றும் விதம் ஆச்சர்யமூட்டும். நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட நுால் எனலாம். இருபதாம் […]

Read more
1 4 5 6