தமிழச்சி ஆண்டாள்! மெய்சிலிர்க்கும் காவியம்

தமிழச்சி ஆண்டாள்! மெய்சிலிர்க்கும் காவியம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு,விலைரூ.290 இது ஆண்டாளின் கதை மட்டும் அல்ல! விஷ்ணுவின் அவதாரங்களையும் லீலைகளையும் உள்ளடக்கிய கதை தான் தமிழச்சி ஆண்டாள். ஆண்டாள் எங்கு, எப்படித் தோன்றினாள், அவளை வளர்த்த பெரியாழ்வார், அன்னை வீரராஜாதேவி யார் எனப் புராணங்களின் அடிப்படையிலும், வரலாற்றுச் சம்பவப் பின்னணியிலும் கோதை சூடிய பூக்களைப் போலவே அழகாகப் பின்னப்பட்டிருக்கிறது இந்தக் கதை. ‘திருப்பதிக்குச் சென்றால் ஏன் கோவிந்தா என்று அழைக்கிறோம்?’ என்பது ஒரு சிலருக்கே தெரியலாம் தவிர நிறைய பேருக்குத் தெரியாது. இது […]

Read more

திராவிட ஆட்சி 50

திராவிட ஆட்சி 50, லெனின், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.200 திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்பாக, 48 பேரின் கட்டுரைகள் தொகுப்பு. ஆட்சியாளர்களின் பலம், பலவீனங்கள் காணக் கிடைக்கிறது. தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, ஆட்சிக் காலத்தை பகுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ‘ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க தொடங்கிய காலம் உதயமானது…’ என, எழுதியுள்ளார். கடந்த, 1967-ல் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தார்; தி.மு.க., 19 ஆண்டுகளும், அ.தி.மு.க., 31 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன. இரண்டையும் சம தட்டில் வைப்பதோ, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளை […]

Read more

தீக்கொன்றை மலரும் பருவம்

தீக்கொன்றை மலரும் பருவம்,  அபுபக்கர் ஆடம் இப்ராஹிம், தமிழில்: லதா அருணாச்சலம், எழுத்து வெளியீடு, விலை: ரூ.499 பழமை தொடரும் சமூகங்கள், பண்பாடுகளின் மைய அச்சாகப் பெண்ணே கருதப்படுகிறாள். பெண்ணின் இயல்பான விழைவுகளையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்திப் பண்பாட்டைக் காக்கும் சமூகத்தின் சின்ன அலகாகக் குடும்பம் திகழ்கிறது. அரசியல் ரீதியான பாதுகாப்பின்மையும் மத அடிப்படையிலான வன்முறைகளும் அன்றாடமாகவுள்ள வடக்கு நைஜீரியாவைப் பின்னணியாகக் கொண்டு அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய நாவல் இது. 55 வயது விதவையான ஹஜியா பிந்தா ஜூபைரு, சமூகமும் குடும்பமும் விதிக்கும் வரம்புகளை […]

Read more

பேய்க்கரும்பு

பேய்க்கரும்பு, அபிராஜ ராஜேந்திர மிச்ரா, சாகித்திய அகாடமி, விலைரூ.115 சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, எட்டு சிறுகதைகள் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால். கதைகள் மிகவும் இயல்பாக அமைந்து உள்ளன. அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து கவித்துவமாக வெளிப்பட்டுள்ளன. மானுட உளவியலையும், இந்தியாவின் நவீன சமூக அமைப்பு முறையையும் கதாபாத்திரங்கள் துல்லியமாக விளக்குகின்றன. முதல் கதை, ‘வாழ வேண்டும் என்ற ஆசை’ என்ற தலைப்பிலானது. விரும்பிய ஆசை, மிக இயல்பாக நிறைவேறுவதை எளிமையாக உறுதி செய்து ஒரு சிற்பம் போல் வடித்துள்ளார் ஆசிரியர். தொகுப்பின் இறுதிக் […]

Read more

உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்

உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.330 இன்றைய உலகமயச் சூழலில் கற்றலும், கற்பித்தலும் எவ்வாறு மாறிவருகிறது; வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ப கலைச்சொற்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது; அக்கலைச் சொல்லாக்கத்தில் எழும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பொருண்மையாகக் கொண்டு எழுதப்பட்ட, 52 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கற்றல் கற்பித்தலில் இன்று நாம் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன? சிக்கல்கள் என்னென்ன? இன்று கற்றல், கற்பித்தல் எவ்வாறு மாறிவருகிறது? எனப் பல புதிய பரிணாமங்களைக் […]

Read more

தொல்குடி

தொல்குடி, நாஞ்சில் நாடன், தமிழினி, விலைரூ.130 நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில், 16 சிறுகதைகள் இடம்பெற்று உள்ளன. நுாலாசிரியர், இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றுள்ளவர் என்பது, ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது புலப்படுகிறது. இவரது சொல்லாடலும், எழுத்தாற்றலும் படிப்பவர்களை தம்முள் ஈர்த்துக் கொள்ளும் என்பது நிச்சயம் நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000028493_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலைரூ.170. இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் எனலாம். சோழ நாடானது வேள் மண்டலம், வேள் தேசம், நாக மண்டலம், பொன்னி மண்டலம், காவிரி நாடு, கிள்ளி மண்டலம் வளவன் மண்டலம் என்று பல்வேறு பெயர்களோடு அமைந்து ஊர்களின் பெயர்கள், ‘கோட்டை’ என்று கொண்டதாக இருந்தது சோழநாடு. வையை நாடு, பாண்டி மண்டலம் என்பதாக பாண்டியநாடு அமைந்து ஊர்களின் பெயர்கள் […]

Read more

இனிய இணையதள நுாலகம்

இனிய இணையதள நுாலகம், முனைவர் ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், விலைரூ.110 பல துறைகளில் நுழைந்த அறிவியல் வளர்ச்சி, இப்போது நுாலகத் துறையிலும் புகுந்து, நுாலகத்தின் பயன்பாட்டை பலருக்கும் அறிமுகப்படுத்தி வளர்ந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நுாலகங்கள் பெற்றுள்ள அதீத வளர்ச்சி, நம் நாட்டு நுாலகங்களிலும் அமைந்துள்ளதை விளக்கமாக இந்நுாலில் விவரித்துள்ளார், நுாலாசிரியர். அதில் குறிப்பாக, இணையதளத்தில் பல நுால்கள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் உலா வருவதையும், ஒரு எழுத்தாற்றலின் படைப்பு, இணையதளம் மூலம், வெளிநாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடிவதையும் விவரித்துள்ளார். நன்றி: தினமலர், 1/3/20 […]

Read more

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூதத்தான், நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், விலைரூ.145 மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026410_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திரைக்கவித் திலகம் 100

திரைக்கவித் திலகம் 100, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், பரணி பதிப்பகம், விலைரூ.250 கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், நுாற்றாண்டு விழாவைக் கருதி படைத்திருக்கிறார். அவர் எழுதிய எளிய தத்துவப்பாடல்கள் காலத்தில் நின்று நிற்பவை. மொழி அறிவும் இசை அறிவும் கொண்ட அவர், ‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் முதன்மையானவர்’ என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். ‘கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்… அறிவை நம்பு உள்ளம் தெளிவாகும்’ என்ற பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு […]

Read more
1 6 7 8