கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், பக். 560, விலை 350ரூ. ஆடுவதும், ஓடுவதும் அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது. சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் […]

Read more

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.   —-   […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம்

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம், பேராசிரியர்-அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 352, விலை 150ரூ. கம்ப ராமாயணத்தை புதிய பார்வையில் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்தவர் அ.ச. ஞானசம்பந்தன். கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயண நூல்களுக்கு ஆறு காண்டங்களுக்கும், அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய முன்னுரைகளை தனி நூலாக்கி, கம்பராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறார்கள். பாலகாண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய இன்னும் ஆராய வேண்டிய பகுதிகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துச் […]

Read more

கம்பன் அன்றும் இன்றும்

கம்பன் அன்றும் இன்றும், பேராசிரியர் கு. ராமமூர்த்தி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 304, விலை 230ரூ- நூலாசிரியர், பேராசிரியர் கு. ராமமூர்த்தி கம்ப ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்து, அதில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இராவணனுடைய மகனான மேகநாதன் என்ற இந்திரஜித்தின் வீரத்தை, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் போர்த் தளபதியாகத் திகழ்ந்த ஜெனரல் ரோமலின், வீர வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ள முறை, வியக்க வைக்கிறது. ராமன் நல்ல தலைவன் என்ற பகுதியில், ராமனிடம் எல்லா வகை நற்பண்புகளும் குடி கொண்டுள்ளன […]

Read more

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ. தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி […]

Read more

புகை நடுவில்

புகை நடுவில், கிருத்திகா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 254, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-0.html மனித உறவுகளை அரசியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் விவரிக்கும் நாவல்தான் புகை நடுவில். இந்த நாவல் கோர்வையாக, சம்பவங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், விவரங்களின் தோரணமாக அமைந்துள்ளது. நடுத்தர வர்கக்த்தின் குறிப்பாக அந்த வர்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை பிரதிபலித்துள்ளது.‘ ஆண், பெண் உறவு குறித்து பல்வேறு தளங்களில் நாவல் அலசுகிறது. அது சில இடங்களில் தனிமதவாதமாகவும், […]

Read more

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், அகமுக சொக்கநாதர் குருஜி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. சித்தர்கள் பலரும் படிப்போர் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மறைமுகமாகவே கூறியுள்ளனர். அவ்வாறாகக் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை தம் ஆய்வுமுறை அறிவுடன் விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர் அகமுக சொக்கநாதர். அகமுகர் என்போர் சித்தர்களே, சித்தர்களின் கருத்துக்களோடு பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தியாவின் சிறந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் நிறுவியவர்கள் தமிழர்களே. இந்திய மொழிகளின் தாய்மொழி […]

Read more

மனிதன்

மனிதன், ஆர். ராமநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ. நாம் பல வரலாறுகளைப் படிக்கிறோம். ஆனால் நமது மனித இன வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அறிவியல் சார்ந்த இந்நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.   —-   தமிழ்ச் சொற்கள் (சொற்பொருள் விளக்கம்), முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 608001, விலை 150ரூ. செம்மொழியாம் தமிழ் மொழியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில்-ராஜேந்திரன், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், சௌத் உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 328, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே நிர்பந்திக்கின்றன. இந்த செயலால், குழந்தைகள் பள்ளிக்கூடம் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள். புத்தகச் சுமை, அளவுக்கு அதிகமான வீட்டுப் பாடங்கள், இடைவிடாத தேர்வுகள் என்று அவர்களை மிரட்டுவதுதான் இன்றைய பள்ளிக்கூடங்களின் செயல்பாடாக உள்ளது. இதனால் மனதளவில் குழந்தைகள் […]

Read more
1 47 48 49 50 51 56