அமர்த்தியா சென் – சமூக நீதிப் போராளி

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி – ரிச்சா சக்சேனா; தமிழில்: சி.எஸ்.தேவநாதன்; பக்.176; ரூ.100; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002 பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இந்நூல் அவருடைய வாழ்க்கையையும், சிந்தனைகளையும் விரிவாகச் சொல்கிறது. பொருளாதாரவியல் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல, அது தத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டது என்பது அமர்த்தியா சென்னின் கருத்து. பொருளாதார நிபுணர் என்ற அளவில் நின்றுவிடாமல், ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்றவற்றிலும் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை நூல் விவரிக்கிறது. “சோஷியல் சாய்ஸ்’ […]

Read more

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் – கமலா கந்தசாமி; பக். 128; ரூ. 60; நர்மதா பதிப்பகம், சென்னை – 17 ‘வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?’ – இது “மரணத்துக்கு பின்பான உலகம்’ பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்களாக இந்நூலில் தந்திருக்கிறார் கமலா கந்தசாமி. ஓரிடத்தில் அந்த ஞானி கூறுகிறார், ‘நீ […]

Read more

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, ஆசிரியர் : இடைப்பாடி அமுதன், வெளியீடு: அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டாபுரம் ரோடு, இடைப்பாடி – 637 101, சேலம் மாவட்டம், பக்கம் 304, விலை: 145 ரூ. சென்னை அண்ணா சாலையில், தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர்.  சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும்.  ஆனால், அந்த மன்றோ துரை யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும் பணிகள் ஆற்றியுள்ளார் […]

Read more

ராதாகிருஷ்ணன் பேருரைகள் (இரண்டு தொகுதிகள்)

ராதாகிருஷ்ணன் பேருரைகள் (இரண்டு தொகுதிகள்), கா. திரவியம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14. தொகுதி 1 – 220 ரூ (626 பக்கங்கள்), தொகுதி 2 – 250 ரூ (586 பக்கங்கள்) முன்னாள் குடியரசுத் தலைவர் தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசின் துணைத் தலைவராய் உலகில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் நிகழ்த்திய ஆங்கிலப் பேருரைகளை, 1952 முதல் 1956 முடிய முதல் தொகுதியாக,  மூலத்திற்கு இணையாக தமிழாக்கம் செய்யப்பட்டு தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. உலக அரங்கில் […]

Read more
1 44 45 46