மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை 12, விலை 90ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அவர் எந்தெந்த மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்? அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள்? அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதை நாடகவடிவில் மவுலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாக்கவி எழுதிய நூல். நாடக வடிவில் எழுதப்பட்டிருப்பதால் விறுவிறுப்பாகவும், படிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- தாயெனும், […]

Read more

மதுரை அரசி

மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ. அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

விளக்கு இங்கே ஒளி எங்கே?

விளக்கு இங்கே ஒளி எங்கே?, காஞ்சி அண்ணல், மணிவாசகர் பதிப்பகம், பக். 112, விலை 40ரூ. சமுதாயப் பொறுப்பு அதிகம் கொண்ட ஆசிரியர் கற்பனை, சிந்தனை உணர்ச்சிகள் கலந்து எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் இவை. காந்திஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து எழுதிய நாடகத்தின் கருவே, நூலின் தலைப்பாக உள்ளது. பொறுமை, அன்பு, நேசம் காக்க விரும்பும் அனைவரும் படிக்கலாம்.   —-   ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், 39, நந்திகோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2, விலை 250ரூ. காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரின் ஆன்மிக வாழ்க்கையின் சில பகுதிகள் நாடக வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்பில் அவர் எத்தனை பெரும் அருளாளர் என்பதும், பாமரனுக்கும் இரங்கும் கருணாமூர்த்தி என்பதும் நெஞ்சில் பரவசமாய் பதிந்து போகின்றன. எத்தனை துயர நிலையில் ஒருவர் வந்தாலும் அவரை பசியமரத்தி ஆற்றுப்படுத்தும் மகானின் கருணை உள்ளம் பக்தர்களை எந்தெந்த விதமாய் குளிர்வித்தது என்பதையும், நடுநடுவே சொல்லிப் போயிருப்பது நெஞ்சார்ந்த சிலிர்ப்பு. […]

Read more

தமிழர் சமுதாய சிந்தனைகள்

தமிழர் சமுதாய சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம், பக். 128, விலை 100ரூ. பதினாறு தலைப்புகளில் சமுதாயச் சிந்தனைகளை அறவுரையாக, தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்ற தலைப்பில் வழங்கியிருக்கிறார் க.ப. அறவாணன். அவ்வப்போது, பல ஏடுகளிலும் (தினமலர் உட்பட) இதழ்களிலும் ஆசிரியர் எழுதிய சமுதாயக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். திருமண வயதைக் குறைத்தால் என்ன? உலகத் தமிழர் கவனத்திற்கு, ஆகிய கட்டுரைகளில், நமது பாரம்பரியத்தை எடுத்துக்காட்டிய அதே சமயம், நடைமுறை சிக்கல்களையும் சொல்லியிருந்தது நல்ல அலசல். ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டும், விதமாக […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், தமிழில்-சி.ந.வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323-10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html டாக்டர் மரியா மாண்டிச்சோரி அம்மையார் இத்தாலிய நாட்டவர், மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சியை நடத்தி வைக்க சென்னைக்கு வந்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஆமதாபாத்தில் குழந்தை கல்வி சம்பந்தமான சொற்பொழிவுகள் ஆற்றினார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாகி இருக்கிறது. இந்த நூலில் அம்மையார் தம்முடைய தீர்க்க தரிசன ஒளியைக் காட்டுகிறார். குழந்தைகளுடன் நெருங்கிப் […]

Read more

தமிழரின் சமையலறை மருந்துகள்

தமிழரின் சமையலறை மருந்துகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், புதிய எண் 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-6.html இந்நூலாசிரியர் ஹோமியோபதி, சித்த மருத்துவம், ரெய்கி – தியான மருத்துவம், ஹிப்னாடிசம், யோகா, அக்குபஞ்சர் முதலான பல்வேறு இயற்கை மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் பேராசிரியர். இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், நமது சுற்றுச்சூழல் எல்லாமே மாசடைந்து போயுள்ளன. […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. […]

Read more
1 4 5 6 7