பீலர்களின் பாரதம்
பீலர்களின் பாரதம், ஆவணப்படுத்தியவர்: பகவான்தாஸ் படேல், ஹிந்தியில்: மிருதுளா பாரிக், தமிழில்: பெ.சரஸ்வதி, சாகித்திய அகாதெமி, பக்.240, விலை ரூ.270. தெற்கு குஜராத், இராஜஸ்தானின் கேட் பிரம்மா தாலுகாவில் டூங்கிரி பீலர் என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பீலர்களின் எழுத்து வடிவமற்ற மொழி பீலி. அம்மொழியில் வாய்மொழிப் பாடல்களாகப் பாடப் பெற்ற மகாபாரதக் கதையின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். சாந்தனுவுக்கும் கங்கைக்கும் ஏற்பட்ட பிணைப்பில் தொடங்கும் இந்நூல், குருஷேத்திர போருக்குப் பிறகான கலியுகத்தின் ஆரம்பம், அதையொட்டி பாண்டவர்கள் இமயமலை செல்வது வரையிலான நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது. […]
Read more