ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை
ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை, வண்ணைத் தெய்வம், மணிமேகலை பிரசுரம், பக். 272, விலை 170ரூ.
இலங்கை மண்ணைவிட்டு பிரான்சிற்கு புலம் பெயர்ந்த எழுத்தாளரான வண்ணைத் தெய்வத்தின் பதிமூன்றாவது புத்தகம் இந்தச் சிறுகதைத் தொகுதி. அகரம் என்ற இதழில், 26 சிறுகதைகளையும், 12 குட்டிக் கதைகளையும் தொகுத்திருக்கின்றனர்.
மண்ணைவிட்டு புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன் மண்வாசனையை மறக்காமல் மனதோடு சுமந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார். சிறுகதைகளில் வரும் எழுத்துக்கள் மிக எளிமையானதாக இருக்கிறது; கருத்தளவில் ஆழமானதாக இருக்கிறது.
நன்றி: தினமலர், 5/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818