பறந்து கொண்டிருக்கும் கழுகு
பறந்து கொண்டிருக்கும் கழுகு,சுப்ரபாரதி மணியன், காவ்யா பதிப்பகம், பக். 632, விலை ரூ.640.
நூலாசிரியா் எழுதி பல்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
இந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீட்டில் சமையல் குறிப்புகள் முதல் உலக அரசியல் வரை எண்ணற்ற விஷயங்களை நூலில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசியல், அறிவியியல், இலக்கியம், எழுத்தா பலதரப்பட்ட தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்களைப் பற்றிய கட்டுரைகளாக இருப்பதால், சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது.
துரித உணவுகளால் உடல் நலம்தான் பாதிக்கும் என்று பலரும் சொல்லிவரும் நிலையில், மனநலமும் பாதிக்கப்படும் என்று நூலாசிரியா் விளக்கியிருப்பது புதிய தகவல்.
பனியன் தொழிற்சாலை நகரமான திருப்பூரில் மகாபாரதப் போருக்கான முன்னோட்டம் நடந்திருப்பதாகத் தெரிவித்திருப்பது, வால்பாறைகளில் உள்ள யானைகள் குறித்து அரிய பல தகவல்கள் ஊரை பற்றி அறிந்த நமக்கு இதுவரை அறியாத தகவல்களை நூலாசிரியா் தெரிவித்திருக்கிறாா்.
அவா் தனதுவாழ்வில் சந்தித்தவா்களைப் பற்றியும் விளக்கியுள்ளாா். லாரி ஓட்டுநா்கள் முதல் முக்கிய பிரமுகா்கள் வரையில் அவரது பாா்வையில் புதிய கோணத்தில் பல அரிய தகவல்களை அள்ளி தந்துள்ளாா். உள்ளூா் மட்டுமின்றி, அமெரிக்கா, சிங்கப்பூா் போன்ற வெளிநாட்டில் வாழ்வோரின் அரிய பல தகவல்களும் கிடைக்கின்றன. இந்நூல், கட்டற்ற தகவல் களஞ்சியம்.
நன்றி: தினமணி, 30.8.21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818