திருக்குறள் தெளிபொருள்
திருக்குறள் தெளிபொருள், புலவர் வ. சிவசங்கரன், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 304, விலை 70ரூ. இம்மைக்கும், மறுமைக்கும் வழிகாட்டும் வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்புகளே மறைகள் (வேதங்கள்). அவையெல்லாம் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்து போதிப்பவையாக விளங்கும். ஆனால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், சமயம் சாராத உலகப் பொதுமறையாக விளங்குவது. எனவே, உலகின் பல மொழிகளிலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மொழிக்கே ஒரு தனிச் சிறப்பைக் கூட்டியுள்ளது. இலக்கிய இலக்கண வளமை மிக்க திருக்குறள், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகவும், கடைச் […]
Read more