அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை(சிறுவர் கதைகள்), மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளின் இலக்யி உலகின் கதவு, கதை கேட்பதில்தான் திறக்கிறது. பாட்டிகள் கதை சொல்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் குழந்தைகளுக்காக குட்டிக் குட்டி கதைகளை சுவாரஸ்யம், நகைச்சுவை, புத்திசாலித்தனம் கலந்து சொல்லி அவர்களின் இலக்கியக் கதவைத் திறந்திட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். படிக்கும் குழந்தைகள் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். சிந்திப்பார்கள். நன்றி: குமுதம், 6/12/2017.
Read more