நீண்ட காத்திருப்பு

நீண்ட காத்திருப்பு, கொமடோர் அஜித் போயகொட, சுனிலா கலப்பதி, தமிழில்: தேவா, வடலி வெளியீடு, விலை: ரூ.220. வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் என்ற ஒன்று இல்லை; ஆனால், ஒரு அர்த்தத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியுமானால், அது தரும் அலுப்பையும் விரக்தியையும் நொறுக்க முடியும். கவிஞன் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி சொல்வதுபோல மரணத்தை ஒத்திப்போட நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால், அன்றாடத்தில் உணரும் சவத்தன்மையை நம்மால் நிச்சயம் அகற்ற முடியும். கலை, அறம், உண்மை, நேசம் போன்ற ஏதோவொன்று அர்த்தத்தையும் நம்பிக்கையையும் தருவதாக உள்ளது. இலங்கையின் கடற்படையில் […]

Read more

ராஜ வனம்

ராஜ வனம், ராம் தங்கம், வம்சி. நாஞ்சில் நாட்டின் காடுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நாவல். காடு, ஆறு, மலை, உயிரினங்கள், மரம், செடிகொடிகள், பறவை என நம்மைச் சுற்றியுள்ள உயிர்கள் அனைத்தும் உறவுகொண்டவை என்பதைக் கதை உணர்த்துகிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே புதியதைத் தெரிந்துகொள்வதும் விளங்காதவற்றைப் புரிந்துகொள்வதும்தான். அந்த வகையில் ராஜ வனம் ஒரு மாறுபட்ட பயணம். நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030932_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மனிதக் குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் சிந்தன் குழு

மனிதக் குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் சிந்தன் குழு, தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட். அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பொருளாகச் சமீப ஆண்டுகளாகக் கருதப்பட்டுவரும் பிளாஸ்டிக், நம் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது. உற்பத்தி, பயன்பாடு, பயன்படுத்திய பிறகு என அனைத்துக் கட்டங்களிலும் பிளாஸ்டிக் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கின் ஆபத்தை எடுத்துரைக்கும் அதேநேரம் அதற்கான மாற்றுப்பொருள்கள் எவையெவை, பிளாஸ்டிக் சார்பை எப்படிக் குறைப்பது என்று இந்த நூல் எடுத்துரைக்கிறது. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

குறுக்கு வெட்டு

குறுக்கு வெட்டு, சிவகாமி, அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை 170ரூ. திருமண உறவு கடந்த காதல், சாகசமா துரோகமா அல்லது ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், போதாமைகள், சலிப்புகள், திருப்தியின்மை, பழித்தீர்ப்பு, சவால்கள் போன்றவற்றின் புறவிளைவா? அது வாழ்வின் தென்றலா, புயலா? மரண விழைவா, உயிர்த்தல் விழைவா? உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தை உடலரசியல், பாலரசியல் ஆகிய இரு கத்திகளின் மீது மொழியை நடக்க விட்டிருக்கிறார் சிவகாமி. தீக்குச்சிக்கும் மருந்துப்பட்டைக்குமிடையில் உறைந்திருக்கும் அமைதியான நடிப்பை உரையாடல்களால் உரசி மூட்டுகிறது இந்நாவல். பேசப்படாத கதைக்களத்தைப் பெண் மொழியில் பேசுகிறது. நன்றி: […]

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு!

கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ், கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581

Read more