சங்கமி பெண்ணிய உரையாடல்கள்

சங்கமி பெண்ணிய உரையாடல்கள், ஊடறு றஞ்சி, புதிய மாதவி, காவ்யா வெளியீடு, விலை 400ரூ. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பிரபலமான பல பெண்களின் நேர்காணல் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஊடறு என்ற அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, இந்தியாவைச் சேர்ந்த புதிய மாதவி ஆகியோரால் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்களையும் மனக்குமுறல்களையும் இந்த நேர்காணல்களில் அப்பட்டமாகக் கொட்டி இருக்கிறார்கள். பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கும் ஆண்கள், ஓரினச் சேர்க்கை, பெண்களின் மது […]

Read more

திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா வெளியீடு, பக். 223, விலை 230ரூ. தமிழ்ச் சமுதாயத்தில் பல நுாறு ஆண்டுகளாக, ஆழமாக வேரூன்றிப் புரையோடிப் போன மடமைகள், பழமைகள் ஆகியனவற்றை நகைப்புக்கு உள்ளாக்கிப் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவை திராவிட இயக்க படைப்பாளிகளின் படைப்புகளும், அவர்தம் இலக்கிய ஆய்வுகளுமாகும். திராவிட இயக்கப் படைப்பாளர்கள் தம் படைப்புகளில் சமூக நீதி, வகுப்பு வாரி உரிமை, மொழி மானம், இன மானம், பெண்ணுரிமை, தமிழ் மொழி வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு போன்ற கோட்பாடுகளை உள்வாங்கி ஜாதி, […]

Read more

இராகவம் தொகுதி 2

இராகவம் தொகுதி 2, தொகுப்பும் பதிப்பும் கா.அய்யப்பன், காவ்யா வெளியீடு, விலை 900ரூ. உவேசா வழித்தடத்தில் நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார். ‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]

Read more

பதிலிகள்

பதிலிகள், மணிநாத், காவ்யா வெளியீடு, விலை 150ரூ. கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரம் மணிநாத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் சாதாரண உழைப்பாளி மக்களைப் பற்றியும் அவர்களது நிரந்தரமற்ற பணிச்சூழலைப் பற்றியும் பெரும் அக்கறையோடு பேசுகின்றன. சமூக உண்மைகளை உரத்த குரலில் முழங்குகின்றன. சென்னையில் பெருவெள்ளத்தின்போது நடைபெற்ற நிகழ்வுகளை அப்படியே சொல்லும் ‘வெள்ளப்பெருக்கு’ம், தர்மபுரி சம்பவத்தை வேறொரு கோணத்தில் பார்க்கும் ‘தப்புக்கொட்டை’ யும் இவரது சமூக அக்கறைக்குச் சான்றான கதைகள். நன்றி: தி இந்து, […]

Read more

பன்முகன்

பன்முகன், சந்திரா மனோகரன், காவ்யா வெளியீடு, விலை 180ரூ. கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு பணிகளோடு சிற்றிதழாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நூலாசிரியரின் 25-ஆவது நூலிது. இதிலுள்ள 24 கதைகளிலும் வரும் சாதாரண மனிதர்கள், எல்லாச் சோதனைகளிலிருந்தும் தன்னம்பிக்கையோடு மீண்டெழுந்து சாதனை மனிதர்களாக தடம் பதிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026537.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தி இந்து, 7/4/2018.

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள் , கொ.மா. கோதண்டம், காவ்யா வெளியீடு,  பக்.620. விலை ரூ.600. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நூலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. படிக்க எடுத்தால் பாத்திரங்களோடு ஒன்றிப் போகும் அளவுக்கு இயல்பான சித்திரிப்புகளுடன் அமைந்திருப்பது இத் தொகுப்பில் உள்ள நாவல்களின் பலம். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கசப்பானது. அடிப்படை வசதிகள் என்றால் என்னவென்றே அறியாத அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காதல் உணர்வுகளுடன் இணைத்துத் தருவது ‘ஏலச் சிகரம் 39‘. இரண்டாம் நாவலான ‘குறிஞ்சாம் பூ […]

Read more

வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ. “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி), 1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர். 1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை […]

Read more

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள்

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள், சரோஜா வைத்தியநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. நல்லதையே நினை, நல்லதையே செய், நல்லது நடக்கும். சோம்பேறியாக வாழாதே, சுறுசுறுப்புடன் வாழ், பிறரிடம் பொறாமை கொள்ளாதே, உழைப்பு உயர்வு தரும், நீயும் ஏமாறாதே, பிறரையும் ஏமாற்றாதே போன்ற நன்மை தரும் கருத்துக்களுடன் நம் பாட்டி சொன்ன கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- சிவங்கங்கைச் சீமை படமாத்தூர் வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர்.விவேகானந்தம், காவ்யா வெளியீடு, விலை 300ரூ. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த படமாத்தூர் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், மதுரை இளங்கவின், காவ்யா வெளியீடு, பக். 422, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024572.html தமிழுக்குத் தொண்டு செய்த கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களாக, முதல் பகுதியில் 72 பேர், இரண்டாம் பாகத்தில், 83 பேர் ஆக மொத்தம், 155 தொண்டர்கள் பற்றிய வரலாற்று இலக்கியக் குறிப்புகள் இதிலடக்கம். ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல், பைபிளைத் தமிழில் அச்சேற்றிய சுகன் பால்கு, திருக்குறள், திருவாசகம், சிவஞான போதத்தை ஆங்கில மொழியாக்கம் செய்த ஜி.யூ.போப், முதலில் தமிழை, 1555ல் […]

Read more

பட்டம் ஒரு தலைமுறை கவசம்

பட்டம் ஒரு தலைமுறை கவசம், கி. முத்துச் செழியன், காவ்யா வெளியீடு, சென்னை, பக். 436, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-3.html மாணவர்கள் பல ஆண்டுகளாக முதலீடு செய்த கடின உழைப்பின் பலனைப் பெறும் நாள்தான் பட்டம் பெறும் நாள். பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, பட்டமளிப்புக்குத் தயார் செய்யும் கல்வி நிறுவனத்தினரும் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியுள்ள நூலாசிரியர், உலக பல்கலைக்கழகங்களின் வரலாறு, பட்டமளிப்பு விழாக்களின் தொடக்க காலம், […]

Read more