தப்புக் கடல

தப்புக் கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக்.192, விலை 150ரூ. ஆசிரியரின், சிறுகதை தொகுப்பு. கிராமத்தில், தன் பால்ய வயது நினைவுகளில் இருந்து, சிறுகதைக்கான கருவையும், அதன் வழியே, அந்நாட்களின் தடங்களையும் பதிவு செய்துள்ளார். தப்புக் கடல முதல், வால் பையன் வரை, 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. சாமானியர்களின் வாழ்க்கையும், சரிந்திரமாகக் கூடும் என்பதை நிரூபித்திருக்கிறார். நன்றி: தினமலர், 20/1/2018

Read more

தப்புக்கடல

  தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், விலை 150ரூ. மண் வாசனை வீசும் பெ. கருணாகரன் கதைகள் தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான .கருணாகரன் எழுதிய 15 சிறுகதைகள் கொண்ட புத்தகம் ‘தப்புக்கடல’. கதாபாத்திரங்களை வடிவமைப்பது, கதையை வேகமாக நடத்திச் செல்வது இரண்டிலும் முழு வெற்றி பெற்றிருக்கிறார், கருணாகரன். அணிந்துரை வழங்கிய வெ. இறையன்பு, “பெ.கருணாகரன் எழுத்துகள் பரிச்சயமானவை மட்டுமல்ல. படிக்கத் தூண்டுபவையும் கூட… மண்ணின் மணம் நிறைந்தவை” என்று குறிப்பிட்டிருப்பது, முற்றிலும் உண்மை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம், ச.சிவ. வல்லாளன், விகடன் பிரசுரம், விலை 155ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-6.html வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் அது ரத்த உறைவைத் தடுக்கும். இஞ்சி சாப்பிடுவோருக்கு இதய நோய் ஏற்படுவது இல்லை. மஞ்சள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறுகிறார் ச.சிவ. வல்லாளன். நன்றி: தினத்தந்தி.   —- காகிதப் படகில் சாகசப்பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 150ரூ. விகடன், குமுதம், நக்கீரன், தினமணி, புதிய தலைமுறை என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இந்நூலாசிரியர், கதை, கட்டுரை, பேட்டி என்று தனது படைப்புகளாலும், வசீகரமான எழுத்தாறறலாலும் வாசகர்களைக் கவர்ந்தவர். தனது 27 வருட பத்திரிகை துறையின் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்நூலில் கட்டுரை வடிவில் சுவைபட கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளன் ஜொலிக்கும் வைரமாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், அதற்காக அவன் பட்டை தீட்டப்படும்போது எத்தகைய […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வலியே மகிழ்ச்சி தமிழ்ப் பத்திரிகையுலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. பத்திரிகையாளனின் கருவிகளான எழுத்து நடை, சொற்சிக்கனம், மொழிவளம், சிந்தனைத் திறன், புதுமை தேடும் மனப்பாங்கு, வாசகர்களைச் சென்று சேரத் தேவையான எளிமை ஆகிய அனைத்தும், ஒவ்வொரு பத்தாண்டும் மாற்றமடைந்திருக்கின்றன. பத்திரிகையாளரான பெ. கருணாகரன் எண்பதுகள், தொண்ணூறுகள், புதிய நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் ஆகியவற்றில் வேறு வேறு தமிழ் இதழிகளில் பணியாற்றியவர். இவற்றில் […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. கடமையை மறந்த கொள்கையால் என்ன புண்ணியம்? தமிழ் பத்திரிகை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் புத்தகங்கள். தமிழில் வெகு குறைவாகவே வெளிவந்துள்ளன. அந்த புத்தகங்களும், 20 ஆண்டுகளுக்கு முன் வந்தவை. அந்த குறையை போக்கும் வகையில் வெளிவந்துள்ளது, இந்த நூல். கடந்த 25 ஆண்டுகளாக, பல்வேறு தமிழ் வார இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பணி புரிந்த, கருணாகரன் தமது அனுபவத்தை, 18 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். ஒரு […]

Read more