சுளுந்தீ
சுளுந்தீ, ரா.முத்துநாகு, ஆழி பதிப்பகம், பக். 472, விலை 450ரூ. பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ. இது, ஒரு மரத்தின் பெயர்; இதை, தீக்குச்சியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்துவர். ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக வினை புரியும் எரி நெருப்பாகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் உணரக் கூடிய வகையில், ஒரு குறியீட்டு நாவலாக அமைத்துள்ளார். இதை, ஒரு தொல்குடி சமூகத்தின் ஆவணமாக கருதலாம். தொன்மை அடையாளத்தின் பண்பாட்டையும், குறிப்பிட்டதொரு […]
Read more