மகான் பாம்பன் சுவாமிகள்

மகான் பாம்பன் சுவாமிகள், முனைவர் ஆ. சந்திரசேகர், செம்மூதாய் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய பாராயணம் செய்தால், நமக்கு, அளவு கடந்த பலன்கள் கிட்டும். பகைக்கடிதல், குமாரஸ்தவம், சண்முகக் கவசம் ஆகிய இந்த மூன்று பாடல்களுக்கும், சிறப்பாக விரிவுரை எழுதியுள்ளார் ஆசிரியர். குமாரஸ்தவம் – இம்மைத் துன்பம், பிறவித் துன்பம் எனும் வெப்பங்களைப் போக்கும். பக்தி இலக்கியம். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை […]

Read more

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்)

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்), இடைமருதூர் கி.மஞ்சுளா, செம்மூதாய் பதிப்பகம், பக்.232, விலைரூ.100. பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் வாசிக்கப்பட்ட, இலக்கிய இதழ்களில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சேரமான் பெருமாள் நாயனாரின் "திருக்கயிலாய ஞான உலா' தமிழின் முதல் உலா என்றும் ஞான உலா என்றும் கருதப்படுகிறது. இது, வயதுக்கேற்ப ஏழு பிரிவினராக பிரிக்கப்பட்ட பெண்கள், சிவபெருமான் உலா வருவதைப் பார்த்து, கொள்ளும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நூலாசிரியர் இந்த உலாவில் கூறப்படும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார். உயிர்கள் எல்லாம் […]

Read more

நகைச்சுவை மன்னர் கலைவாணர்

நகைச்சுவை மன்னர் கலைவாணர், முனைவர் இராம. இராமகுமார், செம்மூதாய் பதிப்பகம், விலை 60ரூ. கலைவாணர் என்றால், அது என்.எஸ். கிருஷ்ணன் ஒருவரையே குறிக்கும். உலகப் புகழ் பெற்ற மேல் நாட்டு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு இணையானவர். சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து வழங்கியவர். ஓடாத படங்களையும் ஓட வைத்தவர். பிற்காலத்தில் போதிய வருமானம் இல்லாத காலத்திலும், கையில் இருப்பதை தானமாக வழங்கிய வள்ளல். அத்தகைய உயர்ந்த மனிதரான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறை, சரளமான நடையில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார், முனைவர் இராம.இராமகுமார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

செம்மொழிச் சிந்தனைகள்

செம்மொழிச் சிந்தனைகள், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், பக். 98, விலை 60ரூ. இளம்பூரணரை பின்பற்றிய உரைக்காரர்கள்! தமிழ் இலக்கியங்களுள் காணக்கிடக்கும் சிந்தனைகளைத் தொகுத்து, ஒன்பது கட்டுரைகளாக பல்வேறு சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். ‘குறுந்தொகைப் பாடல்களில் இலக்கிய மாந்தர்கள் தம் உள்ளத்து எண்ணங்கள் முழுவதையும் வெளிப்படுத்துவதில்லை. கேட்போரின் மனநிலை, சூழல் இவற்றிற்கேற்ப, பேசுவோர் தம் உணர்வுகள் சிலவற்றைப் பேச்சிலும், மெய்ப்பாட்டிலும் வெளிப்படுத்துவர். சிலவற்றை தம் அடிமனதில்தேக்கி வைத்திருப்பர்’ என உளவியல் கோட்பாடு அமைந்திருக்கும் பாங்கை விளக்குகிறார். பிற இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பாட முற்பட்டபோதே, […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும், பதிப்பாசிரியர் சு. சதாசிவம் உள்ளிட்டோர், செம்மூதாய் பதிப்பகம், பக். 538, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024280.html இந்த தொகுப்பில், மொத்தம் 121 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் முதலாக ஆயிஷா நடராசன் படைப்புக்கள் ஈறாக ஆய்வுப் பொருள், பல்வேறு களங்களில் அமைந்துள்ளது. சித்தர் குறித்த ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. களஆய்வின் வெளிப்பாடாக, திருவக்கரை வக்கர காளியம்மன் கோவில் ஓர் ஆய்வு, வீரராகவப் பெருமாள் கோவில் கல்வெட்டுக்கள் கூறும் சமுதாயம் ஆகிய […]

Read more

இலக்கிய மாண்புகள்

இலக்கிய மாண்புகள், செம்மூதாய் பதிப்பகம், ஒவ்வொரு நூலும் விலை 60ரூ. குறுந்தொகை காட்சிகள், சிற்றிலக்கியங்களில் வாழ்வியல், அனுமனின் வீரச்செயல்கள், பெரியு புராணத்தில் பக்தி, பாரதியின் பாஞ்சாலி போன்ற தலைப்புகளில் முனைவர் தா. நிலகண்ட பிள்ளை இந்த நூலில் இலக்கிய நயங்களை எழுத்தோவியங்களாக்கித் தருகிறார். இதேபோல அவர் எழுதிய சிலப்பதிகாரச் சிந்தனைகள், செம்மொழிச் சிந்தனைகள், செவ்விலக்கியப் பதிவுகள் ஆகிய நூல்களிலும் இலக்கிய மணம் வீசுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.   —- வெற்றி உங்களுக்காக, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வெற்றியை விரும்பாதவர்கள் […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும் (நெய்தல் – 2014), பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. கௌசல்யாதேவி, மு. இராசேந்திரன், ஞா. சுஜாதா, க. பூபதி, இல. தங்கராஜ், செம்மூதாய் பதிப்பகம், பக். 556, விலை 400ரூ. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் ஆய்வு மாணவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு, தமிழிலக்கியவகைமைகள் தொடர்பான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் எதைச் சொல்வது? எதை விடுவது? பா. சம்பத்குமாரின் ‘பெண்மையைப் போற்றும் சங்க இலக்கியம்’ தொடங்கி, க. சதாசிவத்தின் […]

Read more

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும்

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும், தொகுப்பும் பதிப்பும்- த. கருப்பையா, செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 375, விலை 300ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. கடந்த மாதம் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பேராசிரியர் சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணியம் நாடகம், தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனோன்மணியத் தமிழ்த்தாய் வணக்கமும் திராவிட […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், முனைவர் சு. சதாசிவம் மற்றும் பலர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 570, விலை 500ரூ. தெய்வமாக கருதிய இயற்கை மருத்துவத்தை இழந்து நிற்கும் தமிழ் சமூகம் தமிழ் சமூக மரபும் மாற்றமும் என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுகளின் தொகுப்பு நூலிது, 142 ஆய்வாளர்களின் கட்டுரைகள், 12 பதிப்பாசிரியர்கள் மூலம் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. தொல்காப்பியம் தொடர்பான எட்டு கட்டுரைகளும், சங்க இலக்கியம் சார்ந்த 42 கட்டுரைகளும், மரபும் மாற்றமும் என்ற தலைப்பை உள்ளடக்கிய வகையில் […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. பூபதி, ஆ. அறிவழகன், பா. சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 560, விலை500ரூ. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ், அகாதெமி, குடியேற்றம் தமிழ்ச்சங்கம் மற்றும் செம்மூதாய் பதிப்பகம் இணைந்து, சென்னையில் நடத்திய பன்னாட்டுக் கருத்ரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைய காலம் தொட்டு நம் தமிழ் சமூகத்தினர் பலவிதமான மரபுகளைக் கடைப்பிடித்து வந்துள்னர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. நம் தமிழ் மரபு எவ்வாறு இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே […]

Read more
1 2