குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை: ரூ.500 தமிழர்கள் பண்பாட்டின் முக்கியமான விளைச்சல் குறுந்தொகை. அந்த நூலை 1937-ல் உ.வே.சாமி நாதையர் பதிப்பித்தார். அதற்கான காலத்துக்கேற்ற செம்பதிப்பை சமீபத்தில் உ.வே.சா. நூல் நிலையம் கொண்டுவந்திருக்கிறது. காதலைப் பாடும் சங்கப் பாடல்கள் ஊடாக, தமிழரின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் உணர முடிகிறது. குறிப்பாக, இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இயற்கை எந்த அளவுக்கு ஊடாடுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000014578.html இந்தப் […]

Read more

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், தமிழில் வண்ணப்பாடல்கள் படைத்து மகிழச் செய்த புலவருள் தலையாயவர் அருணகிரிநாதர். 15 ஆம் நுாற்றாண்டில், தமிழகமெங்கும் முருகன் புகழ்பாடி பெருமை பெற்றார். அவர் பாடியவை திருப்புகழ் எனப் போற்றப்பட்டு வருகின்றன. 16 ஆம் நுாற்றாண்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இராம காதையை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார். திருமால் எழுந்தருளியுள்ள, 108 திவ்விய தேசங்களைப் பற்றிய பிரபந்தங்கள் தமிழில் நிரம்ப உள்ளன. 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் பெருமைகளும், தலச்சிறப்புகளும், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியவர்களல் பாடப்பட்ட […]

Read more

தணிகாசல புராணம்

தணிகாசல புராணம், டாக்டர் உ.வே.சாமிநாகையர், டாக்டர். உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக். 138, விலை 100ரூ. டாக்டர் உ.வே.சா., 1939ல் வெளியிட்ட இந்தநுால், 80 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருத்தணியின் அழகையும், சிறப்பையும், எங்கும் எழுந்தருளியுள்ள முருகனின் பெருமைகளையும், மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகளையும் வெகு விளக்கமாகக் கூறும் இந்நுாலின் கவிச்சுவை சொல்லி மாளாது. உ.வே.சா., முகவுரையே கந்தப்பையரின் புலமையை வெகுவாக பாராட்டியுள்ளது, இப்புராணத்தைப் படிக்கும் ஆவலைத் துாண்டுகிறது. இப்புராணத்துடன் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருத்தணிகைத் திருவித்தமும், உ.வே.சா., எழுதிய குறிப்புரையும் […]

Read more

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், ஆ.இரா.வேங்கடாசலபதி, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், விலை 600ரூ. சுவடிகளில் மட்டுமே இருந்த பழங்கால தமிழ் இலக்கியங்களைத் தேடிச் சென்று எடுத்து பதிப்பித்து அவற்றுக்கு உயிர் கொடுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், 1877 முதல் 1942 வரை தனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்து இருந்தார். ஜி.யு.போப், மறைமலையடிகள், மனோன்மணியம் சுந்தரனார், சி.தியாகராஜசெட்டியார் மற்றும் பல ஜமீன்தார்கள், ஆதுனகர்த்தர்கள் போன்ற பலர் எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை பொக்கிஷமாக சேகரித்து இருந்தார். இவற்றில் 700 கடிதங்கள் முதல் தொகுப்பாக […]

Read more

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக். 798,விலை 400ரூ. அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட […]

Read more

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை, உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்.1144, விலை ரூ. 500. கம்பராமாயணத்திலேயே மிகச்சிறந்த பகுதி, சீதையின் குணநலன்களையும் அநுமனின் பெருமைகளையும் கூறும் சுந்தரகாண்டமே ஆகும். அநுமனுக்கு ‘சுந்தரன் 39’ என்று ஒரு பெயர் வழங்கப்படுவதால் அவனுடைய வீர தீரச் செயல்களை விரிவாகக் கூறும் பகுதி ’சுந்தரகாண்டம் 39’ என்று வழங்கப்படலாயிற்று. இக்காண்டத்தை நாள்தோறும் படிப்பவருக்கு நல்லன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற கம்பராமாயணத்தின் பல பிரதிகளை ஆராய்ந்து ‘தமிழ்த்தாத்தா 39’ உ.வே.சாமிநாதையர் […]

Read more

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும், உ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 194, விலை 100ரூ. நூலாசிரியரின் இருநூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது நான் கண்டதும் கேட்டதும் தொகுப்பு. இதில் தனிப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய வரலாறுகள் சில. சரித்திர சம்பந்தமானவை சில. முள்ளால் எழுதிய ஓலை என்ற கட்டுரை தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. மருது பாண்டியரின் பரோபகாரச் சிந்தையையும் தம் குடிகளை தாய்போல் காப்பாற்றும் பாங்கையும் இக்கட்டுரை எழுத்தாளுமையுடன் எடுத்துரைக்கிறது. இக்கட்டான […]

Read more

சங்கீத மும்மணிகள்

சங்கீத மும்மணிகள், உவே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 292, விலை 180ரூ. தமிழ்த் தாத்தாவும் இசையும் இசைக்கு இசையாத மனித மனம் ஏதுமில்லை. சாகாவரம் பெற்ற இசையும் இசைவாணர்களும் என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்படிப்பட்ட இசைவாணர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அரிது. அதுபோன்ற அரிதான பதிவுகளில் ஒன்றுதான் தமிழ்த்தாத்தாவின் ‘சங்கீத மும்மணிகள்’ நூல். தாத்தாவின் இசைப்பணி தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேடித் தேடி சேகரித்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் ‘கலைமகள்’ இதழில் எழுதிய இசை மேதைகள் மூவர் […]

Read more

புறநானூறு மூலமும் உரையும்

புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்., வெளியீடு டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, விலை 400ரூ. முச்சங்கத்துள் கடைசி சங்க காலப் புலவர்கள் ஆக்கிய எட்டுத்தொகை நூல்கள் எட்டாவதாகப் போற்றப்படுவது புறநானூறு. காலத்தால் அழியும் நிலையில் இருந்த இதனை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் 1894-ம் ஆண்டு முதல் முறையாக வெளியிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த நூலில் புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் எளிமையான உரையுடன் இடம் பெற்று இருப்பது, படிக்க சுவையாகவும், மிக்க பயன் உள்ளதாகவும் […]

Read more

புறநானூறு (பழைய உரையுடன்)

புறநானூறு (பழைய உரையுடன்), டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 806, விலை 400ரூ. சங்க இலக்கியம், எட்டுத்தொகையில் ஒன்று புறநானூறு. அதன் முதற்பதிப்பு, தமிழ்த்தாத்தா உ.வே.சா., வால், 1894ல் வெளியிடப்பட்டது. அந்த பதிப்பு, புதிய பல இணைப்புகளுடன், எட்டாவது பதிப்பாக 2014ல் வெளிவந்துள்ளது. புறநானூறு மூலம் மட்டும், புறநானூறு மூலமும் உரையுமென்று, எத்தனை எத்தனையோ பதிப்புகள், வேறு வேறு நிறுவனத்தாரால் வெளிவந்துள்ளன. பழந்தமிழகத்தின் வரலாறு, கலை, தொழில், வாணிகம், கல்வி, ஆட்சி, பழக்க வழக்கம், பண்பாடு போன்ற பலவும் புறநானூற்றில் பொதிந்து […]

Read more
1 2