காகிதம்

காகிதம், வெ.இறையன்பு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், விலை 50ரூ. மனிதனின் கண்டுபிடிப்புகளுள் மகத்தான இடம் காகிதத்துக்கு உண்டு. அறிவுக் கடத்தியாக தகவல்களை காகிதம் சுமக்கத் தொடங்கிய பிறகுதான், அகிலத்தின் அறிவுக் கண் திறந்தது. உயர்வான காகிதத்தை உதாசீனமாகக் கசக்கிவிடாமல், அதன் அருமை பெருமையை உணரச் சொல்லும் அற்புதமான புத்தகம். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கை என்பது போன்ற வித்தியாசமான தகவல்களும் நிறைய இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்! நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், தொகுப்பு ந.முருகேசபாண்டியன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. 25 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார், இறையன்பு ஐ.ஏ.எஸ். விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்ட கதைகள் ஏராளம். அந்தக் கதைகளில் மிக மிகச் சிறப்பான கதைகளை தேர்வு செய்து இந்தப் புத்தகத்தில் இடம் பெறச் செய்திருப்பவர் ந.முருகேசபாண்டியன். கதைகளைத் தரம் அறிந்து தேர்வு செய்வதில் அவருக்குள்ள இந்தத் தொகுப்பை தரம் உயர்ந்ததாகச் செய்திருக்கின்றன. இதில் உள்ள 14 கதைகளும் நன்முத்துக்கள். ஒரு பூனையை மையமாக வைத்து எழுதப்பட்ட பூனாத்தி என்ற கதை, […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more

நாட்டை உருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின்

நாட்டை உ ருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின், தமிழில் நா. தர்மராஜன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. பிரெஞ்சு அடிமைத்தளத்தின் நெருப்பு ஜுவாலை வியட்நாமிய தொழிலாளர் வர்க்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சமயத்தில் விதைக்குள்ளிருந்து மண்ணை முட்டியெழும் முளைபோல எழுந்தவர் மாமனிதர் ஹோ-சி-மின். சிறைக்குள் தள்ளப்பட்போதிலும்,“பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை. நான் ஓர் அங்குலம்கூடப் பின்வாங்கமாட்டேன்…” என்று உறுதியுடன் சூளுரைத்தார். வியட்நாம் சுதந்திரத்துக்காக போராடி வெற்றி கண்டவர். தம் எழுத்தாற்றலாலும், கவியாற்றலாலும் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படி இத்தகைய […]

Read more

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் […]

Read more

அவனது நினைவுகள்

அவனது நினைவுகள், யூமா. வாசுகி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. ஒரு ஓட்டல் வாசலில் எச்சில் இலையை போடும் தொட்டியின் அருகே நாய்களுடன் சேர்ந்து எஞ்சிய சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறான் ஒரு ஆதரவற்ற சிறுவன். அவனுக்கு பெயரும் இல்லை. பெற்றோர் யார் என்று தெரியாது. சற்று வளர்ந்ததும் ரிக்க்ஷா ஓட்டிப் பிழைக்கும் அவன் ரிக்க்ஷாவில் பயணிக்கும் விபசாரிகளின் அறிமுகம் கிடைப்பதால் புரோக்கராக மாறுகிறான். அப்போது சில வியாபாரிகளின் பழக்கம் கிடைத்ததும் அவர்களுக்காக அடியாளாகவும் […]

Read more

தமிழ் இன்பம்

தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html ’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே – உப்பிலியப்பன்’ என்று மருவியது […]

Read more

தமிழ் இன்பம்

தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600017, பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html ’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே […]

Read more

தமிழில் திணைக்கோட்பாடு

தமிழில் திணைக்கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98, பக்: 126, விலை: ரூ. 80. இன்றைய இலக்கியக்களை நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்காலனியம் என்று பல்வேறு கோட்பாடுகளுடனும் புதிய புதிய சொல்லாடல்களுடனும் சேர்த்துப் பார்க்கும் காலம் இது. இதன் தொடர்ச்சி அல்லது வளர்ச்சி தமிழ்ச் சூழலையும் தமிழிலக்கியத் திறனையும் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுப் […]

Read more