இறையுதிர்காடு

இறையுதிர்காடு,  இந்திரா சௌந்தர்ராஜன், பக்.1104, (2 தொகுதிகள்); விகடன் பிரசுரம், விலை ரூ.1350; இறையுதிர் காடு- ஆனந்த விகடனில் 87 அத்தியாயங்களுடன் தொடராக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்றால் அது மிகைஅல்ல. சித்தர்களில் போற்றுதலுக்குரியவரும், பிரசித்திப் பெற்றவருமானவர் போகர். பாஷாணங்களின் சேர்மானத்தை நேர்த்தியாக கையாள்வதில் வித்தகர். பழனிமலை முருகப் பெருமானுக்கு நவபாஷாணத்தாலான சிலையொன்றை உருவாக்கியவர். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். முன்னதாக சோதனை முயற்சியாக லிங்கமொன்றை உருவாக்கினார். சிலையை மலைக்கும், லிங்கத்தை உலக வெளிக்கும் என நிர்மாணித்தார். சிலை […]

Read more