பன்முக நோக்கில் புறநானூறு
பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. செந்தமிழ் நூல்களுள் பழமையும் இனிமையும் வாய்ந்தது புறநானூறு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றின் எளிமையும், அதில் மணக்கும் தமிழின் சீர்மையும் காலவளர்ச்சியில் படிப்பார் இன்றி மங்கிவிடாமல் தடுப்பதற்கான அரிய முயற்சியாக எழுதப்பட்டுள்ள நூல். புறநானூற்று நூல்களைப்பற்றி அறிந்தவர் அறியாதவர் என எல்லோரையும் கவர்ந்திழுக்கும் எளிய நடை. நன்றி: குமுதம், 6/12/2017.
Read more