புறநானூறும் திருக்குறளும்
புறநானூறும் திருக்குறளும், முனைவர் சரளா ராசகோபாலன், ஒளிப்பதிப்பகம், எண் 4(63), டாக்டர் ரங்கா சாலை, சென்னை 6000018, பக். 232, விலை 150ரூ. சிறந்த புலமையும் எழுத்தாற்றலும் உடைய, நூலாசிரியரின் 74வது நூல் இது. இந்நூலுள் புறநானூறு அறிமுகம், திருக்குறள் அறிமுகம், தொடர் ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. இரு நூல்களையும் பலமுறை ஆழ்ந்து கற்று, ஒப்புமைகளைக் கண்டு ஆராந்து, நுட்பமாக இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். சொல்லாய்வுகளும் இடம் பெற்றுள்ளன. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் […]
Read more