மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை, சி.எஸ். தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 224, விலை 120ரூ. ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிற போது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய். மற்றவர்களுக்கு சேவைகள், நன்மைகள் செய்வதன் மூலம் உன் உடலையும் உள்ளத்தையும் துாய்மைப்படுத்திக் கொள்வாய். உன்னுள் தெய்வீக ஒளி பரவி அதன் மூலம் விமோசனம் பெறுவாய் என்று தர்மத்தின் […]

Read more

போதிதர்மா

போதிதர்மா(நான்கு பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம்,விலை 1700ரூ.(நான்கு பாகங்களும் சேர்த்து). போதிதர்மா – இந்தப் பெயரைச் சொன்னாலே பலரிடமும் ஒரு பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொள்ளும். பல ஆயிரம் வருடம் கடந்தும் உலகம் முழுக்க பேசப்படும் போதிதர்மா இந்தியரா? சீனரா? அவர் வாழ்ந்தது உண்மையா? பொய்யா? முழுமையான வரலாறை, அந்தக் கால நாகரிகம், வாழ்வு முறைக்கு ஊடாக நகர்த்தி, உணர்வுகளோடு பிணைத்து எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான சரித்திர நாவல். நன்றி: குமுதம், 7/3/2018.

Read more

தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், தொகுப்பாளர்: எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை ரூ.300. இந்து சமயம் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வந்த பல்வேறு தகவல்களை, கட்டுரைகளை, செய்திகளை இந்நூல் தொகுத்து தருகிறது. இறைவனின் தன்மைகள் எவை? இந்து மதத்தின் ஆச்சாரியார்களின் தத்துவங்கள் எவை? ஆலயங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது? ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எவை? ஆலயங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? வழிபடும் முறைகள், மார்க்கங்கள், அனுஷ்டானங்கள் எவை? இந்து மதம் சார்ந்த வேதங்கள், ஆகமங்கள், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் என்ன […]

Read more

தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தனுக்கு பதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாதவை. இதுவரை விக்கிரமாதித்தன் கதைகள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது நர்மதா வெளியிட்டுள்ள புத்தகம், பெரிய அளவில் 532 பக்கங்களில் அமைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

அண்ணன்மார் சுவாமி கதை

அண்ணன்மார் சுவாமி கதை, கவிஞர் சக்திக்கனல், நர்மதா பதிப்பகம், விலை 290ரூ. கொங்கு நாட்டு வேளாளர் காவியமான பொன்னர் – சங்கர் வரலாறு, “அண்ணன்மார் சுவாமி கதை” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாடோடி இலக்கியம். பொன்னர், சங்கர், தங்கம் ஆகிய மூவரும் வரத்தால் பிறந்தவர்கள். தாயார் தாமரை, தான் பட்ட இன்னல்களை எல்லாம் மக்களிடம் சொல்கிறார். தான் செய்த சபதங்களையும் சொல்கிறாள். அண்ணன்மார் இருவரும், பங்காளிகளை பழிவாங்கி, அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். பெற்றோர் மறைவுக்குப்பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் […]

Read more

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி, சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக் கொண்டுவர முடியும். நிறைய படைப்பாளிகள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றனர். சாதனைகள் அப்படித்தான் நிகழ்த்தப்படுகின்றன. சமயங்களில் ஊக்குவிப்பு வெளியிலும் கிடைக்கும்; வீட்டிலும் கிடைக்கும். உண்மையில் உங்களுக்கு உள்ளிருந்தும் அதை நீங்கள் பெற முடியும். ஊக்குவிப்பு செய்கிற வேலைகளில் முதன்மையானது, ‘நம்மால் முடியும்’ என்ற உணர்வை ஒருவருக்குள் ஊட்டுவதும் ‘அத்தனை உயர்வுகளுக்கும் நாம் தகுதியானவர்தாம்’ என்ற […]

Read more

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும், ஏ.எஸ். ஆப்ரகாம், நர்மதா பதிப்பகம். நேரத்தை சேமித்து வைக்க என்று எந்த வங்கியும் கிடையாது. ஆனால், நைசாக நழுவிக் கொண்டே கழியும் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாமே… எனக்கு நேரமே இல்லை, என்ன செய்யட்டும் என்று புலம்புவர்கள் இருக்கின்றனர். நேரத்தை முறையாக பயன்படுத்த அதை ஒழுங்கு செய்வது அவசியம் என்பதை எல்லாருமே தலையை ஆட்டி ஒப்புக் கொள்வர். ஆனால், நேரம் இல்லை என்று புலம்புவர்கள் அதை ஓழுங்கு செய்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். வரும் சின்ன சின்ன அத்தியாயங்களில் நம் […]

Read more

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், பி.சி.கணேசன்,நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more
1 4 5 6 7 8 15