தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 420, விலை 370ரூ. இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர் கொண்டு அதன் அடக்கு முறையை வெளிப்படுத்தி, அதை கடந்து போகும் முயற்சி இது (பக்., 11) என்னும் நுாலாசிரியர், தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் விஷயங்கள் அறங்களில் உள்ளன. றம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம், சமண – பவுத்த […]

Read more

பாரதிதாசன் படைப்புக்கலை

பாரதிதாசன் படைப்புக்கலை, ச.சு.இளங்கோ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 475ரூ. தமிழ் இலக்கியத்தைப் பாரதி புதுமைப்படுத்தினார். இவருக்குப் பின் வந்த பாரதிதாசன் புதுமைத் தமிழைப் பொதுமைப்படுத்தினார்.பாவேந்தரின் பாடல்களில் சமூக சீர்திருத்தம் எரிமலையாக ஒளிரும். அதன் வெப்பத்தையும், ஒளியையும் இந்நுாலாசிரியர் ஆய்வு செய்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வேடு நுாலாக, வடிவம் பெற்றுள்ளது. ‘கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா’ எனும் குறுங்காவியங்களை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். கண்ணகி, மணிமேகலை பாத்திரப் படைப்புகளை, சமூக நீதியுடன் ஒப்பிட்டு பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். […]

Read more

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை,  இரா.அறவேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.36, விலை  ரூ.30. சமகால உலகின் நிகழ்வுகளை, அவற்றிற்கு அடிப்படையாக அமைந்தவற்றைப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் பலவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கின்றன. கோவை ஞானியின் பார்வையை விளக்கும் சமதர்மப் படைப்பாளுமை, பெரியாரியம், சமதர்மப் பேருணர்வு எனும் இறையுணர்வு ஆகிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. ஞானியின் பல நூல்களிலிருந்து பல கருத்துகளை நூலாசிரியர் ஆராய்ந்து ஞானியின் மெய்யியல் சிந்தனை பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரைகளில் முன் வைத்திருக்கிறார். மார்க்சியம், […]

Read more

விலைக்கு வந்த வாழ்வு

விலைக்கு வந்த வாழ்வு, அமரந்தா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. தெலுங்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இந்நுால். இதில், தலைசிறந்த கதையான, ‘கவுரவ ஒப்பந்தத்தில்’ பெண்கள் குறித்து எதிரெதிர் மனநிலை கொண்ட இரண்டு ஆடவரின் உளவியலைப் படம் பிடிக்கிறது. இந்நுாலில் இடம் பெற்றுள்ள பெண் பாத்திரங்கள் தைரியமிக்கவர்களாக, துணிந்து முடிவெடுப்பவர் களாக உள்ளனர். பிரியத்தையும் காமத்தையும் வேறுபடுத்தி பார்க்கத் தெரியாத ஆண்கள், அன்பிற்குரிய பெண்களைப் பாடாய் படுத்துவதே, ‘அப்பாவிப் பெண், காம விளையாட்டு’ போன்ற சிறுகதைகளைச் சொல்லலாம். நன்றி: தினமலர், 7/4/2019 இந்தப் […]

Read more

காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் – புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.188, விலை ரூ.175. இயற்கைச் சீற்றம், போர்கள், வாழ வழியில்லாமற் போதல், அரசின் நடவடிக்கைகள் என மனிதர்கள் புலம்பெயர நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து மொரீசியசுக்கு இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளுக்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பப்பட்ட தமிழ் ஒப்பந்த குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியும், 1829 -1891 […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.க.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 104, விலை 85ரூ. கவிமணியை ஒரு பெருங்கவிஞர் என்ற முறையில் நாடு நன்கு அறியும். இந்நுால், கவிமணி கவிஞர் மட்டுமின்றி, வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. நுாலின் முதல் தலைப்பாக கவிமணியின் வாழ்வும் பணியும் பற்றி விளக்குகிறது. கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகால நோக்கு என்ற தலைப்புகளிலும் பின் இணைப்பாக ஆதார நுால்கள், கவிமணி ஆற்றிய […]

Read more

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450. குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் […]

Read more

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250. காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். […]

Read more

கருத்தியல் பற்றிய சிந்தனைகள்

கருத்தியல் பற்றிய சிந்தனைகள், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில்: சே.கோச்சடை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., பக்.204, விலை ரூ.170. இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவை உருவாகி வளர்ந்தமை பற்றி இந்நூல் கூறுகிறது. அதேபோன்று ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருக்கும் இந்தியாவின் பகுத்தறிவு மரபு, செயலறிவுக் கூறுகள், மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில் நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியவை பற்றியும் இந்நூல் கூறுகிறது. பண்டைய இந்தியாவின் செழுமையான அறிவியல், பகுத்தறிவு வளர்ச்சி, ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட மெய்யியல் பரப்பலால் […]

Read more

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more
1 2 3 4 5 26