புறச்சூழல்

புறச்சூழல், ச.முகமது அலி, வேலா வெளியீட்டகம், பக்.127, விலை ரூ. 100.

நம்மைச் சுற்றியிருக்கும் விலங்குகள், பூச்சியினங்கள், தாவரங்கள் என பல உயிர்கள் குறித்தும், சூழலியல் மாற்றங்கள் குறித்தும் நாம் அறிந்திராத பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எலியின் இனப்பெருக்க காலம் 23 நாள்கள் மட்டுமே. அந்த வகையில் ஒரு ஜோடி எலி ஓர் ஆண்டில் 1,100 எலிகளைத் தன் சந்ததியினராக உருவாக்குகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, வளர்ந்து நிற்கும் உயிருள்ள மரங்களை வெட்டாமல் அவற்றை மணமகளுக்குச் சீதனமாக வழங்கும் பண்பாடு புதுக்கோட்டை பகுதி மக்களிடம் இருந்திருக்கிறது.

சீலாகாந்த் என்பது மீன்களின் மூதாதை. சுமார் 7 கோடி ஆண்டுகளாக வாழ்கின்றன. அது அற்றுப்போனது என நம்பப்பட்டது. ஆனால் 1938- இல் தென்னாப்பிரிக்காவில் ஒரு மீன் அகப்பட, ஆராய்ச்சியாளர்கள் அதிசயித்துப் போனார்கள். இந்தியச் சாக்லெட்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் 400 மடங்கு நிக்கல் கூடுதலாக உள்ளது என இந்நூல் பல வியப்பூட்டும் தகவல்களால் நிரம்பி வழிகிறது.

நன்றி: தினமணி, 28/5/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *