மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன்; வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்; விலை:ரூ.200; மாமல்லபுரம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருந்தாலும், சுவாரசியமான ஆய்வுத் தகவல்களோடு, தொடர்கதைக்கே உரித்தான விறுவிறுப்போடு, ஆங்காங்கே பொருத்தமான படங்களைச் சேர்த்து, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று காட்டும் சுகானுபவங்களோடு வந்திருக்கும் இந்தப் புத்தகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. ஆசிரியர், மாமல்லபுரம் கடற்கரை பற்றிய வர்ணனைகளோடு புத்தகத்தைத் தொடங்கி இருப்பதே தனி அழகு. மாமல்லபுரம் சிற்பங்களில் புதைந்துள்ள புதிர்களை வரலாற்றுப் பின்னணியோடும், பக்தி இலக்கியங்களோடும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம், மாமல்லபுரம் கடலில் மூழ்கிய […]

Read more

இங்கிலாந்தில் 100 நாட்கள்

இங்கிலாந்தில் 100 நாட்கள், அகிலா, எழிலினி பதிப்பகம், விலைரூ.300. பயண இலக்கியங்கள், ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்கள் வாழ்வியலை தெரிந்துகொள்ள வழி செய்கின்றன. பயண நுாலுக்கு முக்கியத்துவம், அதன் எளிய மொழிநடை தான். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் விழாக்கள், வாழ்வியல், அரசியல் என, 22 தலைப்புகளில் விரித்துள்ளார். போக்குவரத்து வசதி, பணம், மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. லண்டன் மாநகர அரண்மனைகள், கோட்டைகள், தேவாலயங்கள் என பல குறிப்புகளை கொண்டுள்ளது. பயண இலக்கியத்தில் முக்கிய நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர், […]

Read more

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம், சே.ப.நரசிம்மலு நாயுடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.600. தமிழில் வெளிவந்த முதல் பயண நுால் என்ற குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவம், வழிகாட்டுதலுடன் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மகாசபை நிகழ்வுகள் பற்றியும் விவரிப்பு உள்ளது. கோவையைச் சேர்ந்த நரசிம்மலு நாயுடு, காங்கிரஸ் மகாசபை கூட்டங்களில் பங்கேற்க, இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவத்தை எழுதியுள்ளார். திவ்விய தேச யாத்திரையின் விஷய அட்டவணை என்ற முத்தாய்ப்புடன் துவங்குகிறது. அதில், […]

Read more

தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை – வரலாற்றுத் தடங்களின் வழியே ,  இரா.செந்தில்; டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104; விலை ரூ.120;  தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய […]

Read more

பூமியைச் சுற்றிப் பாருங்கள்

பூமியைச் சுற்றிப் பாருங்கள்,  பத்ஹுர் ரப்பானி,  செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், பக்.426, விலை ரூ.250.   1970 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 20 அக்டோபர் 2018 வரை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த தனது பயண அனுபவங்களை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் பயண அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சென்ற இடத்தின் சிறப்புகள், வித்தியாசமான தன்மைகள், வரலாறு என அனைத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல். சிங்கப்பூரில் எந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்தாலும் மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றுவதற்கென்றே பல நிறுவனங்கள் பல இடங்களில் இருக்கின்றன. […]

Read more

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள்

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், தி.ஜானகிராமன், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், “கல்வி […]

Read more

ஜப்பான் பயணக் கட்டுரைகள்

ஜப்பான் பயணக் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம்,  டி.கே.எஸ். கலைவாணன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.125. உச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது. இம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு […]

Read more

அண்டை வீடு

அண்டை வீடு – பயண இலக்கியம், சுப்ரபாரதி மணியன், வெளியீடு: காவ்யா, விலை ரூ.110 பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார். பின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் […]

Read more

அண்டை வீடு: பங்களாதேஷ்

அண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள்,  சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110. பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் […]

Read more
1 2 3 7