புறநானூறு

புறநானூறு (புதிய வரிசை வகை),  சாலமன் பாப்பையா,  கவிதா பப்ளிகேஷன், பக். 928, விலை ரூ.800. புறநானூறு அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அரசாட்சி, அறச்செயல்கள், உலகத்து நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் உள்ளது உள்ளவாறு எடுத்துரைக்கும் ஓர் வரலாற்று ஆவணமாகும். புதிய வரிசை வகை என்பதற்கேற்ப, மன்னர்களின் கால வரிசைப்படியோ, திணை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ  பாடல்கள் தொகுக்கப்படவில்லை என்பதும், மன்னர் ஒருவரைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் […]

Read more

அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?

அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?,  ஆர்.எஸ்.நாராயணன்,  யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.86, விலை ரூ.70; நூலின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியிருக்கிறது. எனினும் நூல் முழுக்க உணவு சார்ந்த பிரச்னைகளையே பேசியிருக்கிறது. நமதுநாட்டின் தீங்கற்ற பல உணவுவகைகள் காணாமற் போயிருக்க, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளபோது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய […]

Read more

அண்டை வீடு: பங்களாதேஷ்

அண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள்,  சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110. பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் […]

Read more

ஏழு ராஜாக்களின் தேசம்

ஏழு ராஜாக்களின் தேசம், அபிநயா ஸ்ரீகாந்த், யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.248, விலை ரூ.275. தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர்,கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை பெற்றவர்களைப் […]

Read more

உங்களாலும் முடியும்

உங்களாலும் முடியும்,  பி.வி.பட்டாபிராமன், யுனிக் மீடியா ன்டெகரேட்டர்ஸ், பக்.280, விலை ரூ.230. வெற்றியாளர்கள் என்றால் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அல்ல. பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், இடையில் கைவிடாதவர்களே வெற்றியாளர்கள். எந்தத் துறையிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தேவைப்படுவது நம்பிக்கையே. நம்பிக்கையே உண்மையான முதலீடு.ஏழையாகப் பிறப்பது என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் ஏழையாகவே இறப்பதா? என்பது உங்கள் கையில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஓர் உண்மை உள்ளது. அது என்னவென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் செய்து கொள்வது. நிலைமைகள் மாறிக் […]

Read more

திருவருட்குறள்

திருவருட்குறள் (மூலமும் உரையும்), ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல் என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும்என்றும்; கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே […]

Read more

சித்த வைத்திய முறைகள்

சித்த வைத்திய முறைகள், தொகுப்பாசிரியர் லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அலோபதி மருந்துகளை வியாபாரம் செய்து, பெருமளவில் சம்பாதிக்கச் சதித்திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன. இந்நிலையில் அலோபதி டாக்டரான c.அம்பிகாபதி M.B.B.S., D.L.O.. இந்தியாவின் பாரம்பரிய சித்தா மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்து, அதையும் கற்று, அதன் அடிப்படையிலேயே பல வருடங்களாக மக்களுக்கு மருத்துவப் பணியாற்றி வருகிறார். இது கவனிக்கத் தக்க, பாராட்டத்தக்க விஷயமும் கூட. தவிர, இந்த […]

Read more

பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம், கு. பொன்மணிச்செல்வன், செந்தமிழ் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. காதறுந்த ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற ஞான வரிகளுக்கும், பட்டினத்தாருக்கும் உள்ள தொடர்பு தமிழகம் அறிந்தது. அத்தகைய சித்தர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழநாட்டின் பெருநகரமாகவும், மிகப்பெரிய துறைமுகமாகவும் விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், செல்வம் கொழிக்கும் முதன்மை வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். இவர் மாடமாளிகை, அயல்நாட்டு வணிகம், இன்பமான குடும்ப வாழ்க்கை, ஏராளமான பணியாளர்கள்… என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். ஒருநாள் […]

Read more

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள்

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள், கே.சாய்குமார், சாய் குமார் வெளியீடு, விலை 140ரூ. புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள கோவில்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மொத்தம் 355 சைவம் மற்றும் வைணவக் கோவில்களின் வரலாறு, அந்தக் கோவில்களுக்குச் செல்லும் வழி, அந்தக் கோவில்கள் திறந்து இருக்கும் நேரம், அங்கு தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் மற்றும் தொலைபேசி விவரம் என்று பக்தர்களுக்குத் தேவையான அனைத்து பயன் உள்ள […]

Read more

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. 60 சுவை விருந்து பராசக்தியின் கா கா கா எள்ற பிரபல பாடல் ஷுட் செய்யும்போது காகங்களே கிடைக்கவில்லை. பிறகு எப்படி சமாளித்தார்கள்? ஏராளமான புறாக்களைப் படித்துக் கறுப்பு வண்ணம் பூசி… தமிழ்திரையுலகில் நாமறியாத பல விவரங்கள் பற்றி 2…3 டாக்டரேட் செய்யுமளவு ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கே.என்.சிவராமன். படிக்க ஆரம்பித்தால் சீழே வைக்க முடியவில்லை என்று ஒரு சம்பிரதாயத்துக்குச் சொல்வோம்தான். ஆனால் இந்த அடேயப்பா ரகப் புத்தகத்தில் உள்ள பிரமிப்பூட்டும் விஷயங்கள்… […]

Read more
1 2 3 8