கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680. சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – […]

Read more

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்,முல்லை பதிப்பகம்,  பக்.112, விலை ரூ.90. குழந்தைகளுக்கான வித்தியாசமான கற்பித்தல் முறையை உலகுக்கு அளித்த மரியா மாண்டிசோரி, இந்நூலில் குழந்தைகளைக் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; எப்படி அவர்களை நடத்த வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். குழந்தை தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்பது உண்மை. இதுவே ஆதாரமாக இருக்கும் தத்துவம். குழந்தை தன்னுடைய எண்ணங்களை வெளியிட விரும்பும்போது பிரத்யேகமான முறையில் செய்கிறான். அது அவனுடையதேயான முறை. குழந்தைகளை தம்முடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் […]

Read more

ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும்

ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும், தொகுப்பாசிரியர்: இளசை மணியன், வேலா வெளியீட்டகம்,பக்.128, விலை ரூ.100. மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி என்று பாரதியார் பாடிய ருஷ்யப் புரட்சிக்கும் இந்தியாவுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சோவியத் நாடு, இஸ்கஸ், குடியரசு, ஜனசக்தி- நவம்பர் புரட்சி மலர் ஆகியவற்றில் இந்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பாலதண்டாயுதம், ஆர். நல்லகண்ணு, சி.எஸ்.சுப்ரமணியம், நெ.து.சுந்தரவடிவேலு, தொ.மு.சி.ரகுநாதன் மற்றும் பல ருஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. […]

Read more

தேவார யாப்பியல்

தேவார யாப்பியல், அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.576, விலை ரூ.550. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல்களில் இசைப் பாடல்களே அதிகம். இவை பண் முறையில் பிரித்துப் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் யாப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை செய்யுளுக்கு உறுப்பாக அமைகின்றன. இவற்றில் தொடை என்பது ஒலிப்பு முறையால் செய்யுளுக்கு இனிமை தருகின்ற உறுப்பாகும். தொடைகளுள் எதுகை, மோனை ஆகிய இரண்டுமே சிறப்பானவை. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் இதன் சிறப்பை (செய்யுள் 94) எடுத்துரைக்கிறார். அவ்வகையில், தேவாரப் பாடல்களில் […]

Read more

செலுலாய்ட் சோழன்

செலுலாய்ட் சோழன்,  சுதாங்கன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.648, விலை ரூ.625. நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான நூலாசிரியர் சிவாஜியின் திரையுலகப் பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து இருநூற்றைம்பது பகுதிகளாக ஒரு நாளேட்டில் எழுதியதன் தொகுப்பே இந்நூல். இது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. ஆண்டுவாரியான திரைப்பட அனுபவங்களும் இல்லை. ஆனால் சிவாஜி குறித்து இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்கள் (பெரும்பாலானவை சிவாஜியே நூலாசிரியரிடம் கூறியவை) இத்தொகுப்பில் உள்ளன. சிவாஜியின் நாடக அனுபவங்கள், திரைப்படத்தில் நடிக்க சிவாஜிக்கு வந்த வாய்ப்பு, படவுலகில் தொடக்க காலத்தில் […]

Read more

நூலிலிருந்து… – நாகா

நூலிலிருந்து… – நாகா, ஸ்ருதி பதிப்பகம், பக்.288, விலை 200ரூ. நூல்களுடன் நட்புக் கொண்டு அவற்றுடன் நீண்டகாலமாக பழகிவரும் நாகா என்ற நாகசந்திரன், தனது அனுபவங்களையும், தான் படித்த நூல்களையும் பற்றியும், தன்னைக் கவர்ந்த ஆளுமைகள் குறித்தும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவற்றின் தொகுப்புதான் இந்நூல். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவுடன் களமிறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்திய தொழிலதிபரைச் சந்தித்த அனுபவம், விபத்தில் சிக்கியவர்களை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது, சிக்னல் நெரிசலில் தானம் செய்வதைப் பற்றிய நூலாசிரியரின் கருத்து, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று சாலை விதிகளை […]

Read more

வானமே எல்லை

வானமே எல்லை, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 170ரூ. விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார். எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. ‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக்.136, விலை 110ரூ. மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை விட்டு அகலாத கவித்துவத்தின் சிறப்பைச் சொல்கிறார், நுாலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, ஒருநாள் இரவு பகல்போல் நிலவு, தெய்வம் தந்த வீடு, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, மயக்கமா? கலக்கமா? பரமசிவன் கழுத்திலிருந்து, வசந்தகால நதிகளிலே, நீரோடும் வைகையிலே’ உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், காலத்தால் அழியாத கருத்தாழம் மிக்க பொக்கிஷம் என […]

Read more

கண்ணன் கதை

கண்ணன் கதை, ருக்மணிசேஷசாயி, சாயி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. நவீன மொபைல் போன் மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகள், நம் நாட்டு இதிகாசங்களின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதிலும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை, ‘பகவத் கீதை’ என்ற பாடமாக நமக்கு தந்தவர் கிருஷ்ணர். இந்த நுாலில் இடம்பெறும் கிருஷ்ணரின் அவதாரத்தின் இளம் பருவ வரலாற்றை, சிறுவர்கள் […]

Read more
1 2 3 8