தமிழை நன்றாக எழுதுவோம்

தமிழை நன்றாக எழுதுவோம், பேராசிரியர் வே.சங்கர், நன்மொழிப் பதிப்பகம், விலை 150ரூ. தமிழை எழுதும்போது பலருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய பிழைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. பொதுவாக எப்படிப்பட்ட பிழைகள் நேருகின்றன என்பதை விளக்கி, அந்தப் பிழைகளை எவ்வாறு சரி செய்து, நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதை அருகில் இருந்து ஒருவர் சொல்லிக் கொடுக்கும் வண்ணம் ஆசிரியர் இந்த நூலை எழுதி இருக்கிறார். சந்திப் பிழை இல்லாமல் எழுதுவது, பேச்சு வழக்கு சொற்களை தவிர்த்து எழுதுவது, […]

Read more

புதிய வானம் புதிய பூமி

புதிய வானம் புதிய பூமி, பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 333ரூ. தஞ்சையின் சோழ வம்சத்து புகழ் மிக்க மன்னரான ராஜராஜ சோழனுக்குப் பிறகு தஞ்சையை பல மன்னர்கள் ஆட்சி செய்து இருந்த போதிலும், அந்த தேசத்தை 34 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மன்னர் என்ற பெருமையைப் பெற்ற சரபோஜியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த நாவல், பெரும்பாலான வரலாற்றுச் சம்பவங்களை சிதைக்காமல் வழங்கி இருக்கிறது. நாவல் ருசிகரமாகவும், படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக […]

Read more

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. தமிழகம் கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகள் காட்டில் மறைந்து வாழ்ந்து, அதிகாரிகள் கொலை, முக்கிய பிரமுகர்கள் கடத்தல் உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் […]

Read more

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை 200ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டது என்பது இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில் திராவிட இயக்கம் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருக்கிறது என்பதை விளக்கி இருக்கும் ஆசிரியர், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், சினிமா, மேடைப்பேச்சு, அறிவியல் போன்ற பல அம்சங்களில் திராவிட இயக்கம் தனது பங்களிப்பை செலுத்தியது எப்படி என்பதை ஆழமாகப் பதிவு செய்து இருக்கிறார். பிற்காலச் சோழர் […]

Read more

இளமையில் வெல்

இளமையில் வெல், செ.சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களான உருவாக்க வேண்டும். அதே வகையில் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைத்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே […]

Read more

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்,வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதரஸ், விலை 360ரூ. பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பதை பாட நூல் போல அல்லாமல், சுவாரசியமான நிகழ்வுகளைக் கோர்த்து, அவற்றை படிப்பதற்கு சுவை தரும் வகையில் அமைக்க முடியும் என்பதை இந்த நூல் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்வின் சுவடுகளை இந்த நூலில் ஆசிரியர் அழகாக படம் பிடித்துக்கொடுத்து இருக்கிறார். செய்தித்தாள் வினியோகப் பணியில் இருந்தபோது, சிறுவனான தனக்கு ‘தினத்தந்தி’ வினியோகம் செய்தமைக்கு 1954-ம் ஆண்டு தீபாவளியன்று காமராஜர் ஒரு ரூபாய் பரிசு வழங்கியதையும் […]

Read more

அகத்திய ரகசியம்!

அகத்திய ரகசியம்!, ஸ்ரீஜா வெங்கடேஷ், ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ், பக். 674, விலை 400ரூ. நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 372, விலை 400ரூ. முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். – த.பாலாஜி நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும், சுந்தர் பாலா, அழகு பதிப்பகம், பக். 224, விலை 210ரூ. வேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார். அம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும். இதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை […]

Read more

மகாத்மா 150

மகாத்மா 150, உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், பக். 276, விலை 250ரூ. காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக வழங்கியுள்ளார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நுாலை படிக்கையில், தேசப்பிதாவின் வரலாறு மற்றும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 7