புதிய வானம் புதிய பூமி
புதிய வானம் புதிய பூமி, பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 333ரூ.
தஞ்சையின் சோழ வம்சத்து புகழ் மிக்க மன்னரான ராஜராஜ சோழனுக்குப் பிறகு தஞ்சையை பல மன்னர்கள் ஆட்சி செய்து இருந்த போதிலும், அந்த தேசத்தை 34 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மன்னர் என்ற பெருமையைப் பெற்ற சரபோஜியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த நாவல், பெரும்பாலான வரலாற்றுச் சம்பவங்களை சிதைக்காமல் வழங்கி இருக்கிறது.
நாவல் ருசிகரமாகவும், படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில கதாபாத்திரங்களை கற்பனையாக உருவாக்கி உலாவிட்டு இருக்கும் நூலின் ஆசிரியர், மன்னர் சரபோஜி தொடர்பான உண்மையான வரலாற்று சம்பவங்களை உள்ளது உள்ளபடி பதிவுசெய்து இருக்கிறார்.
இரண்டு பகுதியாக அமைக்கப்பட்ட இந்த நூலின் முதல் பாகத்தில் தஞ்சையை கி.ப.1633க்குப் பிறகு எந்த எந்த மன்னர்கள் ஆட்சி செய்தார்கள், அவர்கள் எப்படி மரணத்தைத் தழுவி அடுத்த மன்னர் அரியணை ஏறினார் என்ற வரலாற்றுத் தகவல்கள் இடம் பெற்று இருக்கின்றன.
இரண்டாம் பாகத்தில் உள்ள நாவலில், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் இன்ப ரசம் சொட்டும் வர்ணனைகள், சதித்திட்டங்கள் தொடர்பான பரபரப்பான திருப்பங்கள் உள்பட எல்லா அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் மன்னர் சரபோஜி ஆட்சி நிர்வாகத்தில் கொண்டு வந்த புரட்சிகரமான திட்டங்கள், அவரது மற்போர் திறன், தஞ்சாவூர் தட்டு, தலையாட்டி பொம்மை போன்றவை ஆக்கத்தில் அவரது பங்கு ஆகியவையும் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி,19-2-20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030347.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818