இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், ஹோல்கல் கெர்ஸ்டன், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவரது வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகளின் பதிவு இந்நூல். மத சரித்திர நூல்களை எழுதுவதில் நிபுரணரான ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். அவை இயேசு பற்றிய ஆய்வுக்குப் பயனுள்ள ஆதாரங்களாக விளக்குகின்றன. இயேசு இளம் வயதில் பட்டு வியாபார பாதை (Silk Route) வழியாக இந்தியாவுக்கு […]

Read more

சிவப்புத் தகரக் கூரை

சிவப்புத் தகரக் கூரை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 272, விலை 225ரூ. நவீன இந்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஞானபீடவிருது பெற்ற நிர்மல் வர்மாவின் நாவல் இது.  பருவ வயதில் உள்ள ஒரு சிறுமி எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்குழப்பங்கள், உடல் ரீதியாக எழும் கிளர்ச்சிகள், குதூகலமும், சுற்றியுள்ளன மனிதர்களின் புதிரான நடத்தைகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என்று எல்லாமுமே நாவலாக உருப்பெற்றுள்ளன. ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்கள் சித்திரிக்கப்படுவதுடன், பெண்களின் வாழ்வு குறித்த பெரும் விவாதத்தை ஒரு சிறுமியின் வாழ்வியல் […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 310, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-182-5.html இந்நூலாசிரியரின் பிறமொழி கலப்பில்லாத தெள்ளு தமிழும், ஆற்றொழுக்கு நடையும், புதிய சிந்தனையும் வாசகனை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. மகாபாரதம் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்ட கதை. ஆனாலும் எந்த ஒரு கதாபாத்திரமும் குறைவற்ற நிறைவான உயர்வு நிலையைக் கொண்டவையாக அமைக்கப்படவில்லை. கடவுள் அவதாரமாகக் கூறப்படும் கிருஷ்ண பகவானின் பாத்திரத்திலுள்ள குறைகள் கூட துரியோதனால் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படுகிறது. இப்படி எல்லா […]

Read more

கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர், ஆ.சி. சம்பத், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-183-2.html விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், இந்தியாவின் தென் பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். அவர் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எழுந்த பல சவால்களை எளிதாகச் சமாளித்தார். விஜயநகரத்தின் மீது தொடர்ந்து படையெடுத்த தக்காணத்து சுல்தான்களை வீரம் மற்றும் விவேகத்தால் வென்றெடுத்தார். அவரது பதவி ஏற்பு, ஆட்சிமுறை, போர்கள், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாய அமைப்பு ஆகிய அனைத்தையும் எளிமையாகவும், […]

Read more

மனித நோய்கள்

மனித நோய்கள், அருள் செங்கோர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. மருத்துவ நூல்களில், குறிப்பிடத்தக்க சிறந்த நூல். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? தூக்கமின்மை, மனச்சோர்வு, ஜலதோஷம், தலைவலி, வாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, மஞ்சள் காமாலை முதலிய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும், இந்த நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்துவிட்டால் என்ன சிகிச்சை செய்வது என்பது குறித்தும் இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் அருள் செங்கோர். நோயின்றி வாழ வழி காட்டும் நூல் இது. நூலாசிரியர் அருள் செங்கோர் தமிழறிஞர் க.ப.அறவாணனின் […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more

தருமபுரி இளவரசன் படுகொலை

தருமபுரி இளவரசன் படுகொலை, எம். துரைராஜ், அம்பேத்கர் புரட்சி முன்னணி வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் திவ்யா காதல். அதன்பின் ஏற்பட்ட கலவரம். மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன் குர்லா விரைவு ரயிலின் […]

Read more
1 2 3 8