உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய், இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 180ரூ. ஐ.பி.எஸ். அதிகாரியான இரா.திருநாவுக்கரசு, சுய முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளைக் கொண்ட 31 கட்டுரைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல அமைத்து இருப்பதால் அவை, சுவையான சிறுகதைகளைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி? வாழ்க்கையை எவ்வாறு சந்திப்பது? போன்ற பல வினாக்களுக்கு இந்த நூலில் விடைகள் தரப்பட்டுள்ளன. எளிமையான வாசகங்கள், யதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு இருப்பதால், இந்தக் கட்டுரைகளை எளிதாக […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கமலக்கண்ணன் கோகிலன், மணிமேகலைப்பிரசுரம், விலை 250ரூ. இந்த நாவல், நல்கிராமம் என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும் தற்போதைய நகரங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றி அதிகமாக பேசும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பொழுதுபோக்காக வெறும் கதையை மட்டும் சொல்லிப்போகாமல், தற்கால நாகரிக உலகில் பாதிக்கப்பட்ட சமூக நலன்கள், மதுவிலக்கு போன்றவை பற்றிய ஆதங்கமான கருத்துகள் கதை நெடுகிலும் வற்புறுத்தப்பட்டு இருக்கிறது. படிக்காத அந்தக் காலத்து பாட்டன் அப்பாவை விட, படித்த தற்காலத்து மக்கள் தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே.ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இருந்து வித்யாசமானவர். கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜனநாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான […]

Read more

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள்

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள், ச.சுபாஷ் சந்திரபோஸ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., பக். 214. விலை ரூ.175. தொல்காப்பிய எழுத்தியல் தொடர்பான பல கேள்விகளுக்கு இந்நூல் விளக்கமளிக்கிறது. எழுத்தியலில் உள்ள பல சொற்களுக்குத் தீர்வு கூறுகிறது. தமிழ் எழுத்துகளின் வைப்பு முறை, உயிர்மெய், தன்னொற்று மிகுதல், இனவொற்று மிகுதல், எழுத்துகளின் இழப்பு, புணர்ச்சியும் உறழ்ச்சியும், புணர்ச்சி விதி இல்லாப் புணர்ச்சிகள், எழுத்துப் பேறும் சாரியையும், அண்ணவினம் ஆதல் ஆகிய ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. உலகிலுள்ள, எழுத்துள்ள மொழிகள் அனைத்திலுமே ஒன்றிற்கு ஒன்று வரி […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய்,  இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், பக்.224, விலை ரூ.180. போராட்டம்தான் வாழ்க்கை. போராட்டம் என்பது நம்மோடு – ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தீமையை எதிர்க்கும் போராட்டம். நல்லதை உயர்த்தும் போராட்டம். போராட்டத்தின் உச்சநிலை யுத்தம். நமக்குள்ளே உள்ள நேர்மறை எண்ணங்களை, செயல்பாடுகளை உயர்த்தி, எதிர்மறை எண்ணங்களை, செயல்பாடுகளை நம்மிடம் இருந்து அழித்தால் வாழ்வில் வெற்றி உறுதி. இதுதான் நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் யுத்தம் என்று இந்நூலின் அடிப்படையை முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் நூலாசிரியர். ஒருவர் தமக்குள் இருக்கும் தீமையை எதிர்க்கும் […]

Read more

ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத்தாலாட்டுதே,  கவிஞர் முத்துலிங்கம்,  வானதி பதிப்பகம், பக்.496, விலை ரூ.400., தமிழகம் நன்கறிந்த கவிஞரான முத்துலிங்கம் தனது திரைப்பட அனுபவங்களை தினமணி நாளிதழில் தொடராக எழுதினார். அதில் வெளி வந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சிவகங்கைக்கு அருகில் உள்ள கடம்பங்குடி என்ற கிராமத்தில் பிறந்த முத்துலிங்கம், திரைப்படப் பாடல் எழுதும் ஆர்வத்தால் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியடைந்ததும், மீண்டும் தேர்வு எழுதும்போது மணிமேகலை என்ற திரைப்படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு மறுநாள் எழுதிய தேர்வில் தோல்வியடைந்ததும், அதன்பிறகு தமிழ் வித்வான் படிப்பையும் முழுமையாகப் […]

Read more

ஆன்மா என்னும் புத்தகம்

ஆன்மா என்னும் புத்தகம், என்.கௌரி, இந்து தமிழ் திசை வெளியீடு,  விலை: ரூ.130 உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகளைப் படிப்பதே அந்த ஆன்மிகப் புத்தகங்களின் சாரத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/6/19. […]

Read more

வாராணசி

வாராணசி, பா.வெங்கடேசன், காலச்சுவடு, விலை 225ரூ. இந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வைதீகம் வரும். ‘வாராணசி’ நாவல் வழியாக தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையைக் கட்டிக்கொண்டிருக்கிறார் வெங்கடேசன். தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ். ஏ.ஆர்.சீனிவாசன் வெளியீடு, பக். 296, விலை 200ரூ. இந்நூலாசிரியர் நாடகம், சினிமா, சின்னத்திரை போன்றவற்றில் பிரபலமானவர். வக்கீலுக்குப் படித்தவரும் கூட. இவர் தனது 50 வருட கலைத்துறை அனுபவத்தை அமுதசுரபி இதழில் தொடராக எழுதியபோது அது வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்நூலில் தனக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு அனுபவத்திலிருந்து தொடங்கும் ஆசிரியர், அடுத்து சிவாஜி, ஜெயலலிதா, சோ, நாகேஷ், மனோரமா, இயக்குனர் ஸ்ரீதர், எம்.எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், வாலி, கே.பி. சுந்தராம்பாள், சின்னப்பதேவர், சந்திரபாபு, சிவக்குமார் என்று […]

Read more

நிலம் உங்கள் எதிர்காலம்

நிலம் உங்கள் எதிர்காலம் – ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் குறிப்புகள் – சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன், பெரிகாம் பதிப்பகம், பக்.342, விலை ரூ.525. நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும், புரோக்கர்களுக்கும் பயன்படும் நூல். ரியல் எஸ்டேட் தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், அதைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நிலங்கள், நில ஆவணங்கள் பற்றிய அடிப்படை என்ற முதல் அத்தியாயத்திலேயே நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான மக்களுடைய நம்பிக்கைகளையும் உண்மையான நிலை என்ன என்பதையும் விளக்குகிறார். வில்லங்க சான்றிதழ் என்றால் […]

Read more
1 2 3 6