ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம்

ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம், ராவ்சாஹேப் கஸ்பே, தமிழில்: சுந்தரசோழன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.195. அம்பேத்கரிய ஆய்வாளர் டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே ஆர்.எஸ்.எஸ்ஸின் கோட்பாட்டு அடிப்படைகளை விளக்கும் விதமாகவும் அதன் சித்தாந்தத்தை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தும் விதமாகவும் மராத்தியில் எழுதிய ‘ஜோட்’ என்னும் நூல் ஏழு பதிப்புகள் கண்டுள்ளது. 2019-ல் வெளியான இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ராவ்சாஹேப் புதிதாக எழுதிச் சேர்த்த பகுதிகளையும் இணைத்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து, 14/5/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d/ இந்தப் புத்தகத்தை […]

Read more

நானொரு நேனோ துகள்

நானொரு நேனோ துகள், ப.கல்பனா, வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், விலை: ரூ.150, சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர் ப.கல்பனா. இது அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கல்பனாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ 1999-ல் வெளியானது. சீன, ஜப்பானிய, கொரியக் கவிதைகளை கல்பனா மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இவருடைய பல கவிதைகள் பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்களில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 7/5/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033313_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

மாயவனம்

மாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலைரூ.120 மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று வரை […]

Read more

கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் – ரா. கிருஷ்ணையா, ஜீவா பதிப்பகம், பக். 286, விலை ரூ.200, அளவில் நூல் பெரிதல்ல என்றாலும் ரஷிய நாவல்களில் வாசித்த அல்லது வாசிக்கப் போகும் ஒவ்வொருவரையும் மறக்க முடியாமல் வைத்திருக்கச் செய்யும் பிரம்மாண்டமான வல்லமையைக் கொண்டது.  மனித மனதின் உள்ளுறை ஆழத்தை ஊடுருவிப் பார்த்து அதன் கலைச் சிந்தனையை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரான கொரலேன்கோ, இந்த நாவலில் பிறப்பிலேயே பார்வையில்லாத ஒருவனை – பியோத்தர் – கதைநாயகனாகக் கொண்டு உண்மையான அகத்தின் […]

Read more

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை

புரிந்துகொள்வோம் ஊரக உள்ளாட்சியை, பேராசிரியர் க. பழனித்துரை, கோரல் பப்ளிஷிங் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர், பக். 216, விலை: ரூ. 230 உள்ளாட்சி அமைப்புகளின் பணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கொள்வது எப்படி என்பவற்றையெல்லாம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். உள்ளாட்சி என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதில் தொடங்கி, ‘தலைவர்கள் உருவாக்கம்’, ‘பேரிடர் மேலாண்மையில் உள்ளாட்சி’, ‘மாதிரி கிராமம் உருவாக்கல்’, ‘தேர்தல் முறை மாற்றங்கள்’, ‘நாம் செய்யத் தவறிய பணி’, ‘நூறு நாள் வேலை: ஒரு பார்வை’ உள்ளிட்ட தலைப்புகளில் 30 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. […]

Read more

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர், அமுதன் அடிகள், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம், பக். 112, விலை ரூ.150. இத்தாலியில் உள்ள காஸ்ட்ரான் டெலி ஸ்ட்ரூவி என்ற ஊரில் 1680-இல் பிறந்த வீரமாமுனிவர், 1710-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்து தொண்டாற்றினார். அவரது தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டுகள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தாலியில் அவர் பிறந்த ஊரின் சிறப்பு, குடும்பத்தினர் விவரம், அங்கு அவர் ஆற்றிய சமயத் தொண்டு என்று இத்தாலிக்கே சென்ற நூலாசிரியர் தான் தேடி திரட்டிய தகவல்களை விரிவாக வெளியிட்டுள்ளார். பெஸ்கி குடும்பத்தைச் […]

Read more

தமிழக வரலாற்று நூற்களஞ்சியம்

தமிழக வரலாற்று நூற்களஞ்சியம், முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.460. ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் வீழ்வுக்கும் சான்று கூறும் எழுத்துச் சின்னம்’ என்பதை, ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலிலிருந்து தரும் நூலாசிரியர் வரலாற்றின் பயன், வரலாற்று முறையியல், தொல்லியலும் வரலாறும் ஆகியவை பற்றி முன்னோர் மொழிந்த மொழியைப் பதிவிட்டிருக்கிறார். ‘தொன்மைக்கால வரலாறு’ என்ற பகுதியில் மொழி, சிந்து சமவெளி நாகரிகம், அங்கு குடியேறிய திராவிடர்கள், ஆரியர்கள், மூத்த குடிகள் பற்றிய விவரம், மதுரை கீழடி, குமரிக்கண்டமும் லெமூரியாவும் என […]

Read more

தம்மபதம்

தம்மபதம், பெளத்த அறநூல், மொழி பெயர்ப்பு: நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக். 80, விலை ரூ.75. பழைய நீதிநூல்களான அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, பர்த்ருஹரியின் நீதி சதகம், இன்னா நாற்பது இனியவை நாற்பது, வியாச கீதை போன்றவற்றுக்கு எளிய தமிழில் விளக்க நூல்கள் எழுதியது போன்று தம்மபதத்துக்கும் எளிய தமிழில் நூலாசிரியர் விளக்கம் தந்துள்ளார். பாலியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு, பின்னர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதிலிருந்து ஜெர்மனி தத்துவஞானி மாக்ஸ்முல்லரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூலை அடிப்படையாகக் கொண்டு […]

Read more

மீண்டும் ஒரு தொடக்கம்

மீண்டும் ஒரு தொடக்கம், வளவ.துரையன், சந்தியா பதிப்பகம், பக். 128, விலை ரூ.125. பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலாசிரியர், தனது 16 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்தச் சிறுகதைகள் தினமணி கதிர் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவை. தனது வாழ்வில் நேரிட்ட அனுபவங்களைப் பெரும்பாலும் கதை வடிவமாக்கி இருப்பதாக முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க கிராமத்து பேச்சு நடையில் விறுவிறுப்பாகச் செல்கிறது. கதையின் தொடக்கத்தில் இருந்து, முடிவு வரை ஒவ்வொரு கதையும் சலிப்புத் தட்டாமல் செல்கிறது. வாழ்க்கை […]

Read more

வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும்

வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும், பேராசிரியர் தி. முருகரத்தனம், தமிழ்ச் சோலை, பக். 150, விலை ரூ. 150. தமிழில் அறம், பொருள், இன்பம் என்று கூறப்படும் முப்பாலுக்கும், வட மொழியில் தர்மார்த்தகாம மோட்சம் என்று கூறப்படும் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றுக்கும் இடையிலான ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராயும் ‘தென்தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்’ கட்டுரையில் தொடங்கி, தமிழ் இலக்கண- இலக்கியங்களில் உறுதிப் பொருள்கள், வள்ளுவரின் எழு பிறப்பு எழுப்பும் குழப்பம், இம்மையும் மறுமையும் – […]

Read more
1 2 3 8