மாயவனம்

மாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலைரூ.120 மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று வரை […]

Read more

ஞான வாசிட்டம் மூலமும் உரையும்

ஞான வாசிட்டம் மூலமும் உரையும், பி.சி.ராமலிங்கம், கோவிலூர் மடாலயம், விலைரூ.800. வடமொழியில் யோகவாசிட்டம் என்ற மூல நுாலைத் தமிழில் மொழிபெயர்த்து, வீரை.ஆளவந்தார் அருளிய 2,055 பாடல்களுக்கு மூலத்துடன் உரை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விருத்தங்களில் எழுதப்பட்டுள்ள பாடல்களை எளிய வாசிப்புக்காக சீர் பிரித்து பொழிப்புரையும் தந்திருப்பது சிறப்பு. ஞான வாசிட்டத்திற்குப் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும், இன்றைய வேதாந்த மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. பாடல்களில் உள்ள கதைகளின் தன்மைகள் பாயிரத்தில் தெளிவாக பாடப்பட்டுள்ளன. பாயிரம் துவங்கி, வைராக்கியம், முமூட்சு, உற்பத்தி, திதி, உபசாந்தி, நிருவாணம் […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், அ. இராகவன், அழகு பதிப்பகம், விலைரூ.220, தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது.உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை வெளிநாட்டார் ஆய்வை எடுத்துக்காட்டி விளக்குகிறார். மட்பாண்டங்கள், மண்டை ஓடுகள், அரிய கருவிகள் பற்றி விரிவாக உணர்த்துகிறது. திராவிட நாகரிக வாழ்வில் பொன், இரும்பு ஆகியவை அணிகலன்ளாக வடிவமைத்து அணிந்ததை எடுத்துரைக்கிறது. பண்டைத் தமிழர் […]

Read more

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!, சஞ்சீவி ராஜா சுவாமிகள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 அடியார்கள் கேட்ட வினாக்களுக்கு விடையாகத் தந்த தகவல்களை பேசுகிறது இந்த நுால். சில வினாக்களுக்கு, அனுபவப்பூர்வமாக விடையளித்திருப்பது வாழ்வின் யதார்த்தத்தைக் காட்டுகிறது. பிரச்னைகள் அதன் தீர்வு என்ற முறையில் செல்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள், வழிபாடுகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என்பதை காரண காரியங்களோடு விளக்குகிறது. ஞானம், தியானம் என்பனவற்றை முழுமையாக விவரிக்கிறது. பிறப்பும் இறப்பும் கர்மவினையின் செயலே என்பதை இந்த நுால் பதிவு செய்துள்ளது.பஞ்சபூதம், நவகிரகம், மனிதப்பிறவி. பாபம், சாபம் […]

Read more

மகாத்மா?

மகாத்மா?, இளமதி அறிவுடைநம்பி, உ.வி.சா.பிரின்ட்சன் கிரியேஷன்ஸ், விலைரூ.100. காந்தி மகாத்மாவா, இல்லையா என்பதை புதிய கோணத்தில் பார்க்கும் நுால். மொத்தம் 12 கட்டுரைகள் உள்ளன. அரசியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும். காந்தியின் கருத்தில் மிக முக்கியமானது நாட்டுக்கு வக்கீல், வைத்தியர் அவசியம் இல்லை என்பதே. உண்ணும் முறை அறிந்தால் வைத்தியரும் தேவை இல்லை. குற்றமின்றி வாழப் பழகினால் வக்கீல்களும் தேவையில்லை என்கிறார். அரச குலத்தில் பிறந்து இளவரசனாக வாழ்ந்தாலும் புத்தருக்கு போர்க்குணம் பிடிக்கவில்லை. போரால் ஏற்படப் போவது ஒற்றுமையோ, வெற்றியோ அல்ல. மாறாக பகைமையும், […]

Read more

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ்

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ், ஜெகதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.80. பாவம் செய்பவர்களுக்கு ஆண்டவனால் தரப்படும் தண்டனையே நோய் என்ற கருத்தை உடைத்து நொறுக்கிய மருத்துவ அறிவியல் முன்னோடி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேய், பயம், கடவுள் கோபத்தால் நோய் வருகிறது என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என நிரூபித்து, அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றவர். இவரது கருத்துகள் மருத்துவ உலகில் இன்றும் அறியப்படுகின்றன. மருத்துவ சேவை புரிய விழையும் டாக்டர் எடுக்கும் சத்தியப் பிரமாணத்துக்கு, ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி என பெயர். பல நாடுகளில் […]

Read more

அழகர் கோயில்

அழகர் கோயில், தொ.பரமசிவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.300 தமிழகத்தில் மிக முக்கியமான வைணவ திருக்கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் பற்றி ஆராய்ந்து, வரலாற்றுப்பூர்வமாக விரிவான தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். கோவிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் உள்ள குறிப்புகள், அழகர் கோவிலின் சமூகத் தொடர்பு என பல விபரங்களை ஆராய்ந்து, துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது. அந்த வட்டார மக்களுக்கு கோவிலுடன் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக ஆராய்கிறது. இதில், கள்ளர் இன மக்கள், இடையர் இன மக்கள், பள்ளர் மற்றும் பறையர் இன […]

Read more

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை, டாக்டர் அபினவம் ராஜகோபாலன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.470. மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர். எந்த கவலையும் இல்லாத சூழலே மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே நிம்மதியை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நுால் தான், இன்பமே எந்நாளும் துன்பமில்லை. புத்தக அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் […]

Read more

நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், கே.சந்துரு, அருஞ்சொல், விலைரூ.500. வாழும் காலத்தில் சாதனைகள் புரிந்த தமிழக சட்ட மேதை சந்துரு எழுதிய சுயசரிதை நுால். சமூக அக்கறை மிக்க செயல்பாட்டாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக ஆற்றிய பன்முகச் சேவைப் பணிகளின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது. தமிழ் சமூகத்தில் ஒரு காலகட்ட வலியையும், அதற்கான மாற்றத்தை தேடியபோது ஏற்பட்ட அனுபவத்தையும், 22 கட்டுரைகளில் தருகிறது. நெகிழ்வை உள்ளீடாக கொண்டு உள்ளது. சுய புராணத்தை முன் வைக்கவில்லை இந்த நுால்; சமூகத்தில் கற்றதை, அனுபவமாக பெற்றதை வளர்ச்சி செயல்பாட்டுக்கு பயன்படுத்திய […]

Read more

மனிதகுலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

மனிதகுலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு, ருட்கர் பிரெக்மன், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், விலைரூ.599. மனித குலம் நம்பிக்கையுடன் பயணிக்கிறதா, அவநம்பிக்கையுடன் நகர்கிறதா என்ற மதிப்பீட்டை முன்வைத்து எழுதப்பட்டுள்ள முக்கிய நுால். தொல்லியல், மரபியல், மானுடவியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகளை மையப்படுத்தி உள்ளது. உலகில் நெருக்கடியான காலங்களில் நடந்த முக்கிய சம்பவங்களை மறு விசாரணை செய்கிறது. சுயநலத்துக்கு மனிதன் முன்னுரிமை கொடுக்கிறான் என, காலங்காலமாக நிலவும் கருத்து மீது கேள்வி எழுப்புகிறது. நெருக்கடிகளின் போது மிக இயல்பாக செயல்பட்டுள்ளது மனித இனம் என்பதை பல்வேறு ஆய்வுகளை […]

Read more
1 2 3 240