அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும், நீதிநாயகம் து.அரிபரந்தாமன், நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, பக். 88, விலைரூ.75. ‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும் 39’ – இந்நூலின் முதல் கட்டுரை. இது தவிர இன்னும் ஏழு கட்டுரைகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யில் நூலாசிரியர் ஆற்றிய உரை, அவர் நீதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரை, பணிநிறைவு பெற்ற போது ஆற்றிய உரை, ‘பொதுபள்ளிக்கான மாநில மேடை 39’ அமைப்பு நீட் பற்றி வெளியிட்ட துண்டறிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரி நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை, இயற்கை […]

Read more

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.104, விலை ரூ.100. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மிகவும் எளியமுறையில் விளக்கும் நூல். இடம், வலம், மேலே, கீழே, சிறியது, பெரியது, அதிக தூரம், குறைந்த தூரம் ஆகியவை உண்மையில் சார்பானவை. ஒளியின் வேகம் மாறுவதேயில்லை. அது சார்பற்றது. காலம், இடம்சார்புடையவை. திசை சார்புடையது. பேரண்டப் பிறப்பு, முடிவு, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு போன்றவற்றை சார்பியல் கோட்பாடு இல்லாமல் விளக்க முடிவதில்லை. பல்சார், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்ற சம்பவங்கள் சார்பியல் கோட்பாட்டின் […]

Read more

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை, உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்.1144, விலை ரூ. 500. கம்பராமாயணத்திலேயே மிகச்சிறந்த பகுதி, சீதையின் குணநலன்களையும் அநுமனின் பெருமைகளையும் கூறும் சுந்தரகாண்டமே ஆகும். அநுமனுக்கு ‘சுந்தரன் 39’ என்று ஒரு பெயர் வழங்கப்படுவதால் அவனுடைய வீர தீரச் செயல்களை விரிவாகக் கூறும் பகுதி ’சுந்தரகாண்டம் 39’ என்று வழங்கப்படலாயிற்று. இக்காண்டத்தை நாள்தோறும் படிப்பவருக்கு நல்லன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற கம்பராமாயணத்தின் பல பிரதிகளை ஆராய்ந்து ‘தமிழ்த்தாத்தா 39’ உ.வே.சாமிநாதையர் […]

Read more

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு, சுசிலா ரவீந்திரநாத், தமிழில்: எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. தமிழகத் தொழில்துறை வளர்ச்சியை விவரிக்கும் ஆவணமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழில்நிறுவனங்களான முருகப்பா குழுமம், டிவிஎஸ் குழுமம், அமால்கமேஷன்ஸ் குழுமம், எம்ஆர்ஃஎப், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொடக்கம், வளர்ச்சி, அவற்றின் இன்றைய நிலை வரை இந்நூல் விவரிக்கிறது. தொழிலைத் தொடங்கியவர்களின் பின்புலம், அதற்காக தொழில்முனைவோர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூறப்பட்டுள்ளன. அதற்குப் பின்பு ஸ்ரீராம் குழுமம், அப்பல்லோ மருத்துவமனை, […]

Read more

கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், பேராசிரியர் சி.பிரதாபசிங், காவ்யா, விலை 430ரூ. இந்தியாவின் தென்கோடியில் அமைந்து இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய சிறப்பான ஆய்வு நூல். கோவில் தோன்றிய காலம், அந்தக் கோவிலில் காணப்படும் சிலைகள், கல்வெட்டுக்கள், வாகனங்கள், இசைக்கருவிகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், அங்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விழாக்கள், அதில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரம், கோவில் தொடர்பாக கூறப்படும் கதைகள் என அனைத்தும் ஆய்வு நோக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றாலும், ஆன்மிகம் மற்றும் வரலாற்று […]

Read more

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், இரா. இளையபெருமாள், சகுந்தலை நிலையம், விலை 300ரூ. தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான வைணவத் தலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த 108 தலங்கள் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொரு கோவிலும் எந்த இடத்தில் அமைந்துள்ளது, எந்த வழியாகப் போகலாம் என்ற விவரங்களுடன், அந்த கோவிலின் சிறப்புகள் பற்றி தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதியுள்ளார் இரா. இளையபெருமாள். கோவில் மூலவர்கள் படங்கள், ஆர்ட் காகிதத்தில் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சிறந்த கட்டமைப்புடன் உயரிய பதிப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல். […]

Read more

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 225ரூ. ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா எல்லாம் அவருக்கு தண்ணீர்பட்டபாடு. இடையிடையே நகைச்சுவையை கலந்து சிரிக்கவும் வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார். அவர் மறைவு, ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத ஒரு சூனியத்தை ஏற்படுத்திவிட்டது. பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் தமது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதுவே இந்தப் புத்தகம். தலைப்பைப் பார்த்தால், வாரியார் வரலாற்றை வேறு ஒருவர் […]

Read more

பணமே ஓடிவா

பணமே ஓடிவா, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் பணத்தை எப்படி சேமிப்பது, அதை எப்படி பெருக்குவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. பணத்தை ‘குட்டி போட வைப்பது‘ எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் தெளிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் சோம. வள்ளியப்பன். ‘லட்சாதிபதி ஆவதற்கு நிச்சயமான வழி என்ன தெரியுமா? ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக ஒரு தொகையைச் சேமிப்பது மட்டுமல்ல. சேமிப்பதை ஏதாவது ஒரு லாபகரமான இடத்தில் முதலீடு செய்து வருவதும்தான்’ இப்படி பல […]

Read more

சிந்தையில் விளைந்த சீரிய மு(வி)த்துக்கள்

சிந்தையில் விளைந்த சீரிய மு(வி)த்துக்கள், ஹஜ்ஜா ஏ. யாஸ்மின் ஆலிமா, எஸ்கேஎஸ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியா இஸ்லாமிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலில் ரமலான், ஹஜ், முகரம் மாதங்களின் மகிமை, சமுதாயம் உயர்வடைய வழிகாட்டும் உன்னத இஸ்லாமிய வழிமுறைகள், சமுதாய அவலங்கள் – அதைச் சரி செய்ய தீர்வுகள் என்பன போன்ற தலைப்புகளில் நூலாசிரியர் ஹஜ்ஜா ஏ. யாஸ்மின் ஆலிமா எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஐஸ் பெட்டிக்குள் ஒருநாள் பிணமாக உறங்கப் போகிறோம் என்பதற்கான ஒத்திகைதான் இப்போது நாம் அனுபவிக்கும் ஏ.சி. சுகம் என்பதை “குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கி வாழ்வின் கடைசி நிமிடங்களுக்காக ஒத்திகை பார்ப்பது அனிச்சையாகி விட்டது” என்று கோ.வசந்தகுமாரன் அழகுற எடுத்துரைக்கிறார். “துக்க வீட்டில் நீ அழும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது ஈவிரக்கமற்ற என் காதல்”, “கடல் பிரிய மனமில்லை. கைக்குட்டையில் நனைத்துக் கொண்டேன்” என்பன போன்ற சுவையான கவிதைகளை […]

Read more
1 2 3 9