ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை. தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல […]

Read more

இரண்டு வரி காவியம்

இரண்டு வரி காவியம், திருக்குறள் தெளிவுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் வெளியீடு, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-4.html நறுக்கென்று ஒரு திருக்குறள் உரை திருக்குறளுக்குப் பரிமேலழகர் போன்ற ஜாம்பவான்கள் முதல், சென்ற நூற்றாண்டின் டாக்டர் மு.வ. வழி ஆயிரக்கணக்கில் உரை எழுதியிருக்கிறார்கள். இப்போது கதாசிரியர், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடைமுறைத் தமிழில் சரளமாக எழுதியுள்ள உரை விளக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் நறுக்கென்று இரண்டே சொற்களில் மையக் கருத்தைச் சொல்லியுள்ள பாங்கு […]

Read more

ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும்

ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும், ஜே.கே. ரௌலிங், தமிழில் பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங், நியூ டெல்லி, விலை 299ரூ. இங்கிலாந்தில் பிறந்த ஜே.கே. ரௌலிங்குக்கு அடுத்த ஆண்டுதான் ஐம்பது வயது நிறைவடைகிறது. அதற்குள் இவரது சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிடவும் அதிகமாகிவிட்டது என்கிறார்கள். கணவன், மூன்று குழந்தைகளோடு எடின்பர்க் நகரில் வசிக்கும் ரௌலிங் சம்பாதித்த சொத்து அவ்வளவும் எழுதிச் சம்பாதித்தது என்பதை நம்மவர்கள் நம்புவது சிரமமோ சிரமம். 1997ஆம் ஆண்டில் வெளியான ஹாரி பாட்டர் அண்ட் பிலாஸபர்ஸ் ஸ்டோன் என்ற முதல் தொகுப்பு […]

Read more

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமி, ஸ்ரீ லலிதா பதிப்பகம், கோவை, பக். 194, விலை 200ரூ. கோவிலில் வைத்து வரன் பார்ப்பது, திருமண விசேஷங்களில் மாப்பிள்ளை பெண் தேடும் யுகம் மாறி பத்திரிக்கை, இணைய தளங்கள் வாயிலாக வரன் தேடல் எளிதாகிப்போனது. வந்து குவியும் தகவல்களை வரிசைப்படுத்தி, நமது மகள் (அ) மகளுக்கு ஏற்ற வரனை முடிவு செய்வது பெற்றோர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். திருமண தடை, தாமதம் ஏன்? என்பதும், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஏற்படும் குழப்பங்களும் குடும்பங்களை […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. எழுத்துல பிதாமகர் அமரர் கல்கி எழுதிய குறுநாவல் மோகினித் தீவு. கல்கியின் தனித்துவமான நடையழகில், மனித வாழ்வின் ஆதார உணர்வுகளான நகைச்சுவை, வீரம், மர்மம், திகில், காதல் ஆகியவை கொண்டு மிளிரும் என்ற நமது அறியாமை கலந்த எண்ணத்தை அவரின் மோகினித் தீவு குறுநாவல் தகர்த்து எறிகிறது. ஒரு தியேட்டர் படம் பார்க்கப்போன இரண்டு பால்ய நண்பர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஜப்பானிய போரின்போது […]

Read more

வியப்பூட்டும் விடுகதைகள் 1000

வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சி. இலிங்கசாமி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 35ரூ. விடுகதைகளை, சிந்தனையைத் தூண்டும் அறிவுத்திறன் மேம்பாடுப் பயிற்சி எனலாம். இந்த நூல், அந்த பயிற்சிக்கு உதவும் சுவாரஸ்ய விருந்து. நூலின் இருந்து சில விடுகதைகள், நோய் நொடியில்லாமல் நாளெல்லாம் மெலிகிறாள். அவள் யார்? விடை = தினசரி நாட்காட்டி. கல்லிலே சாய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ, அது என்ன? விடை = சுண்ணாம்பு. கண்ணுக்குத் தெரியாதவன், தொட்டவனை விடமாட்டான். அவன் யார்? விடை = மின்சாரம். […]

Read more

பண்டித ஜவஹர்லால் நேரு

பண்டித ஜவஹர்லால் நேரு, செ. சசிகலா தேவி, வின்வின் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 50ரூ. முதல் பிரதமரான நேருஜியின் வாழ்க்கை வரலாற்றை, சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். நேருஜியின் இளமைப் பருவம், முதல் மேடைப்பேச்சு, முதல் சிறைத்தண்டனை, சுதந்திரப் போராட்டப் பங்களிப்புகள், பிரதமராக இருந்தபோது நாட்டு முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட சேவைகளை சிறு சிறு சம்பவங்களாக எழுதியிருப்பதோடு, பல அரிய தகவல்களையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. நூலின் முக்கிய நிகழ்வுகள் பகுதியில் இருந்து ஒரு துளி, ஒரு முறை, கர்நாடகாவில் நேருஜி காரில் சென்று […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ. நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி […]

Read more

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள், முனைவர் எஸ். சந்திரா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 55ரூ. உள்நாடு, வெளிநாடு என்று பல கணித அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இந்நூலாசிரியர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு இவ்விரு துறைகளிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால், வள்ளுவன் கூறிய ஏதாவது ஒரு குறளுடன் ஒத்துப் போவதை அறியலாம். அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருக்குறளைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதை […]

Read more
1 2 3 9