தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம்

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ்நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த சங்கங்கள் எக்காலத்தில் இருந்தன? அதில் இடம் பெற்றிருந்த புலவர்கள் யார்? அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் எவை? என்று ஆராய்ந்து, தான் கண்டறிந்த உண்மைகளை இந்த நூலில் எழுதியுள்ளார் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். அத்துடன் தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை பற்றியும் ராசமாணிக்கனார் புதுத்தகவல்களை விவரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின், புதிய வடிவமைப்பிலும் சிறந்த கட்டமைப்பிலும் நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

வடமொழி வரலாறு

வடமொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. “வடமொழி (சமஸ்கிருதம்) ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் தேவநேயப் பாவாணர். “தேவபாஷை” என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட வடமொழி, இன்று பேச்சு மொழியாக இல்லை. கோவில்களில் அர்ச்சனை செய்வதற்குப் பயன்படும் மொழியாகவே இருந்து வருகிறது. “திராவிடத்திற்கு தாயாக மட்டுமின்றி, ஆரியத்திற்கு (வடமொழி) மூலமாகவும் தமிழ் விளங்குகிறது” என்று இந்த நூலில் ஆணித்தரமாக விளக்குகிறார் பாவாணர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், விலை 160ரூ- தொலைக்காட்சி இயக்குநராக பணிபுரிந்த ஏ. நடராஜனின் நினைவு கூறும் நூல். அவர் எழுத்தாளரும் கூட. ஒரு கால கட்டத்தில் சதா சர்வகாலமும் நாம் கேட்டுக் கொண்டிருந்த பெயர் இது. நிறைய ரசனை உணர்வுகள் பெருகி வந்ததால் பார்த்து வந்த பணிக்கு மேலாக கல்வி கேள்விகளில் சிறந்திருக்கிறார். இசையின் மீதான அவரது ஈடுபாடு போற்றுதற்குரியது. மொத்த நூலிலும் அவர் பற்றி எழுதியிருக்கிற கட்டுரைகளில் ஆத்மார்த்தம் தெரிகிறது. அவர் எல்லோர் மீதும் […]

Read more

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா.தேவதாஸ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சல்மான் ருஷ்தீக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தீர்க்கமான நாவல்களுக்காக மேலான கவனம் பெற்றிருப்பவர். அவரது இந்த புத்தகம் அதிக நுட்பம் நிரம்பியது. அணுக்கமான வாசிப்பு இருந்தால் இதன் மைய இழைகளை சுலபமாக தொட்டுவிடலாம். அவரது உரைநடை குறித்தும் அதன் செதுக்கிய தன்மை குறித்தும் இலக்கிய உலகில் மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். பெரிதாக உரையாடல்கள் ஏதும் இல்லை. படிக்கும்போதே சில குறிப்புகள் கிடைக்கின்றன. சில ஒளித்து […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 425ரூ. இந்து மதம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் பல்வேறுவித வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் சின்னச் சின்ன தலைப்புகளில் ஏராளமான விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிரபஞ்ச தோற்றம், கோவில்களின் அமைப்பு, சிவனின் திருநடன தத்துவம், இறைவழிபாடு, துறவு வாழ்ககை, திருவிழாக்கள், சடங்குகள் எனப் பல தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வேதங்கள், ஆகமங்கள், திருமந்திரம் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி இருப்பது […]

Read more

வேலூர் புரட்சி

வேலூர் புரட்சி, பேராசிரியர் ந. சஞ்சீவி, அலைகள் வெளியீட்டகம், விலை 60ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி காலகட்டத்தில் மக்கள் எழுச்சியும், பல்வேறு போராட்டங்களும் வலுப்பெற்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற செயலுக்கு வேலூர் புரட்சி அடித்தளமாக அமைந்தது. அத்தகைய வேலூர் புரட்சி குறித்து பேராசிரியர் ந. சஞ்சீவி ஓர் ஆய்வு நூலாக வழங்கியுள்ளார். வேலூரின் தொன்மையான வரலாற்றையும் அவர் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், (ஆன்மிகக் கட்டுரைகள்), கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக திருமுறைகள் விளங்குகின்றன என்பதை இந்த நூலின் ஆசிரியர் ராதா நடராஜன் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —-   சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. அகஸ்தியர், திருமூலர், போகர், பத்ரகிரியார் உள்ளிட்ட 11 சித்தர்கள் பற்றிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர் பற்றியும் […]

Read more

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை, டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், தமிழில் பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதி புத்தகாலயம், விலை 450ரூ. மனித மனத்தை அல்லது இயல்பை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. யாருடைய நடத்தையும், மனப்பாங்கும் அறுதியிட்டு உறுதியாக சொல்லப்படுவதற்கில்லை. புரிந்தும், அறிந்தும் கொள்ளப்படாத விஷயங்களில் மனித இயல்பு பிரதானமாகிவிட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராயப்புகுந்திருக்கிறார் டாக்டர் ராமச்சந்திரன். அறிவியல் நூல்தான். ஆனால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உணரக்கூடிய விதத்திலும் இருக்கிறது. இதை மொழிபெயர்ப்பது மலையைப் பிளக்கிற காரியம். மனமுவந்து செய்த அக்கறையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி […]

Read more

திரவுபதியின் கதை

திரவுபதியின் கதை, ஒரியா மூலம் பிரதிபாராய், ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா, தமிழில் இரா. பாலச்சந்திரன், சாகித்திய அகாதெமி, விலை 275ரூ. மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று திர்வுபதி. விதி வசத்தால் ஐந்து பேரை கணவர்களாகப் பெற்ற திரவுபதி, பத்தினி என்று சிலரால் போற்றப்பட்டாலும் வேறு சிலரால் வேசி என்று இகழப்பட்டாள். இதன் மூலம் அவள் அடைந்த இன்னல்களை விவரமாகவும் உருக்கமாகவும் தந்து இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதக் கதையை அதிக அளவில் பயன்படுத்தி, அத்துடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கோர்த்து அருமையான நாவல் போல […]

Read more

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள்

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள், கலைஞன் பதிப்பகம், விலை 150ரூ. தமிழக அரசியலில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடியவர், ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மனித உரிமை பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தொடக்க முதலே போராடியவர். அவர் “கதை சொல்லி கே.எஸ்.ஆர்.குறிப்புகள்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல சிறப்புக்குரிய மாமனிதர்கள், பல்வேறு வரலாற்று சிறப்புகள், யதார்த்த உண்மைகள், எல்லாவற்றையும் 157 பக்கங்கள் கொண்ட இந்த […]

Read more
1 2 3 7