வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ‘மேலும்’ சிவசு, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.240. மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம் பெற்றுள்ள கல்யாணி சிறுகதையில் வரும் இளம் பெண் கல்யாணி தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர முயற்சிக்கிறாள். அரசுப் பணியில் இருக்கும் காசிநாதனுடன் திருமணம் நடக்கிறது. பிரிவும் நேர்கிறது. தந்தை வீட்டுக்குத் திரும்பும் கல்யாணி, மீண்டும் தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர நினைக்கிறாள். ‘மலருக்கு மலர் தாவும் வண்டுகள் ஆண்கள் என்று குற்றம் […]

Read more

தமிழ்க் கவிதையியல்

தமிழ்க் கவிதையியல், தொகுப்பாசிரியர்: இரா.சம்பத், சாகித்திய அகாதெமி, பக்.608, விலை ரூ.440. சாகித்திய அகாதெமி சார்பில் “தமிழ்க் கவிதையியலும் யாப்பும்’ என்ற பொருண்மையில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வ.ஞானசுந்தரம், தமிழவன், செ.வை.சண்முகம், தி.இராஜரெத்தினம், ப.திருஞானசம்பந்தம் போன்ற ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையான யாப்பிலக்கணத்தை தமிழ், கன்னடம் ஆகிய இரு திராவிட மொழிகளுடன் ஒப்பிடுகிறது ஒரு கட்டுரை. யாப்பின் அடிப்படையில் கவிதை எழுதுவதற்கு சொல் வளம் அவசியம். அந்தச் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு நிகண்டுகளைக் கற்பதும் அவசியம். […]

Read more

பீலர்களின் பாரதம்

பீலர்களின் பாரதம், ஆவணப்படுத்தியவர்: பகவான்தாஸ் படேல், ஹிந்தியில்: மிருதுளா பாரிக்,  தமிழில்: பெ.சரஸ்வதி, சாகித்திய அகாதெமி, பக்.240, விலை  ரூ.270. தெற்கு குஜராத், இராஜஸ்தானின் கேட் பிரம்மா தாலுகாவில் டூங்கிரி பீலர் என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பீலர்களின் எழுத்து வடிவமற்ற மொழி பீலி. அம்மொழியில் வாய்மொழிப் பாடல்களாகப் பாடப் பெற்ற மகாபாரதக் கதையின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். சாந்தனுவுக்கும் கங்கைக்கும் ஏற்பட்ட பிணைப்பில் தொடங்கும் இந்நூல், குருஷேத்திர போருக்குப் பிறகான கலியுகத்தின் ஆரம்பம், அதையொட்டி பாண்டவர்கள் இமயமலை செல்வது வரையிலான நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது. […]

Read more

லா.ச.ரா.

லா.ச.ரா., லா.ச.ரா. சப்தரிஷி, சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் இலக்கியவுலகில், கதையோ கட்டுரையோ ஒரு வரியைப் படித்தவுடன் “இது இவர் எழுதியதுதானே’ என்று கேட்கும்படியான தனித்துவமிக்க எழுத்து நடை அமையப்பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் லா.ச.ரா. என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிறுகதை, புதினம், கட்டுரை என்று தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த எழுத்தாளர் இவராகத்தான் இருப்பார். லா.ச.ரா.வின் சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், அவற்றில் காணப்படும் வார்த்தை ஜாலங்கள், தத்துவமொழிகள் […]

Read more

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.288,  விலை ரூ.315. 2017 – ஆம் ஆண்டு வரலாற்றியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு உரையரங்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. அந்த உரையரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றிய நா.வானமாமலை, ஆசிரியர் பணியைத் துறந்து சொந்தமாக “ஸ்டூடன்ட்ஸ் டுட்டோரியல் இன்ஸ்டிடியூட்’ என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். அது பின்னர் “வானமாமலை தனிப்பயிற்சி நிறுவனம்’ என்று மாறியது. 1967 – இல் அவர் “நெல்லை ஆய்வுக் […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்திய அகாதெமி,  பக்.356, விலை ரூ.300.  தமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவற்றில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன்,சு.வேணுகோபால்,ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும்,படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை, படைப்பாளிகள் […]

Read more

இராமகிருஷ்ண பரமஹம்சர்

இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி லோகேஸ்வரானந்தா, தமிழில்: இலா.வின்சென்ட், சாகித்திய அகாதெமி, பக்.128, விலைரூ.50. முறையான தொடக்க கல்வி கூட கற்காத கடாதர் என்ற சிறுவன் எவ்வாறு உலகமறிந்த ஞானியாக இராமகிருஷ்ண பரமஹம்சராகப் பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். ராமனின் அவதாரமாக ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றியிருப்பதாக அவர் குழந்தையாக இருக்கும்போதே பலர் கருதியிருக்கின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பல சமயங்களில் கடவுளைக் காணும் பரவசநிலைக்கு உள்ளாகியிருக்கிறார். இந்நூல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்துமதம் மூலம் மட்டுமே கடவுளை உணரும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருந்த ராமகிருஷ்ண […]

Read more

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.260. தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து  வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பித்தன் என்ற இதழை நடத்தியிருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், […]

Read more

புவி எங்கும் தமிழ்க் கவிதை

புவி எங்கும் தமிழ்க் கவிதை, தொகுப்பாசிரியர்: மாலன், சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ.160. புவியின் எட்டுத் திக்குகளிலிருந்தும் பெறப்பட்ட கவிதைகள் சிறப்பாக இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நார்வே, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை பன்முகம் கொண்டதாகவும், அதே நேரத்தில் விரிவின் பொருட்டு செறிவைத் தவறவிடாமல் செழுமை வாய்ந்ததாகவும் ஆக்க நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சியை கவிதைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. இலங்கையில் வசிக்கும் கவிஞர் அபார் தாள் […]

Read more

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.260. தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பித்தன் என்ற இதழை நடத்தியிருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், […]

Read more
1 2 3 7