கம்பனின் தமிழமுது

கம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300. சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன. துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே […]

Read more

ரகசியமான ரகசியங்கள்

ரகசியமான ரகசியங்கள், கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. தினத்தந்தியின் முத்துச்சரத்தில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற “ரகசியமான ரகசியங்கள்” அரிய புகைப்படங்களுடன் புத்தகமாகி இருக்கிறது. ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன் எழுதிய வரலாற்று ஆய்வுகளில் இது முக்கியமானதாக திகழ்கிறது. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தில் காலடியில் மறைந்து கிடந்த, மறைக்கப்பட்ட ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் அவர் தந்திருக்கிறார். வரலாறு என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பாக […]

Read more

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம், ம.சுசித்ரா, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 150ரூ. இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கல்விக்கு வழிகாட்டி நன்றி: தி இந்து, 17/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ. காலத்தின் கருவூலம் உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். […]

Read more

பனியில் ஒரு பிரளயம்

பனியில் ஒரு பிரளயம், தமிழில் எஸ். விஜயன், ஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, விலை 200ரூ. மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டது. அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120, இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.முத்தமிழ், மூவேந்தர்,மூன்று தலைநகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.பண்டிய மன்னன் அரசவையில் […]

Read more

போதி தர்மா

போதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.604, விலைரூ.600; வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன. வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]

Read more

கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ. பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் […]

Read more
1 2 3 8