ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,  விலைரூ.290. பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரியும் அந்த நிலையை இளம்வயதிலேயே அடைந்தார். பதின்ம வயதில் தந்தை, தாத்தாவை இழந்து பின்னர் தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உணவை மறந்த உடல் நலிந்தாலும் அருணாச்சல மந்திரத்தால் உள்ளம் உறுதியடைந்தார். அப்படியே ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சேஷாத்ரி கதையை படிக்க […]

Read more

உணர்வுகள் மோதும் பொழுது

உணர்வுகள் மோதும் பொழுது, மாந்துறை பாபுஜி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.220 நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள். லுார்துவின் மகன் ஜோசப் நல்ல பையன். திடீரென்று திருத்த முடியாத குடிகாரன் ஆகிறான். அவன் ஏன் குடிகாரன் ஆனான் என்பது தான் கதையை வளர்க்கிறது. காதல் தோல்வி அவனை குடிகாரன் ஆக்குகிறது. காதலித்த பெண் கிடைத்ததும் திருந்தி நல்ல மனிதன் ஆகிறான். சம்பவங்களை அடுக்கிச் செல்லும் முறையிலும் கதை மாந்தர் உரையாடலிலும் நேர்த்தி உள்ளது. […]

Read more

ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்

ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம், ஜெயஸ்ரீ கிஷோர், சத்யா பதிப்பகம், விலைரூ.200. ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை விரதம், அதன் பலன் பற்றிய விளக்கங்களை எளிமையாகப் படிக்க முடிகிறது. ஷீரடிக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, அதைச் சுற்றியுள்ள, 23 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சனீஸ்வரர் கோவில் உள்ளது போன்ற தகவல்கள் புதுமை. பாபாவுடன் இருந்த, 12 அருளாளர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பாபா தினமும் பிச்சை […]

Read more

கருவறைத் தேசம்

கருவறைத் தேசம், முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர்கள் தோட்டம், விலைரூ.180. கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார். வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ […]

Read more

கனவெனும் மாயசமவெளி

கனவெனும் மாயசமவெளி, ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180. ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு… கனவுக்குள் கிரைம்… த்ரில்லர்… கில்லர்… நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது. மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு […]

Read more

திருக்குறள் தெளிவுரை

திருக்குறள் தெளிவுரை, முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.100. திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை வெளியாகியிருக்கும். அவற்றுள் சற்று மாறுபட்டிருக்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் என முன்னுரையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எளிதில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் பதம்பிரித்து வெளியிட்டிருப்பதுடன் எளிமையான உரை விளக்கமாக உள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் ஓரளவு பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 29/12/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

சுக்கா… மிளகா… சமூக நீதி?

சுக்கா… மிளகா… சமூக நீதி? , ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு,  மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512.  விலைரூ.500,  இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் […]

Read more

மணிச்சித்திரத்தாழ்

மணிச்சித்திரத்தாழ்,  தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக்.158, விலை ரூ.150. மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இரு இணையர்கள்தான் இந்நாவலின் நாயகர்கள் மற்றும் நாயகியர். அவர்களது காதல், மண வாழ்க்கை, இல்லறம் குறித்த கதை என்றாலும், அதனுள்ளே இருவேறு மதங்களைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளையும், அதனால் ஏற்படும் சவால்களையும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். காதலின் ஊடே சமகால சமூகப் பிரச்னைகளை அலசும் வகையில் இந்நாவல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பேரன்பாக ஒவ்வொருவரது ஆழ்மனதுக்குள்ளும் நிறைந்திருக்கும் காதல், பேராண்மையாக இந்த மானுடத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கருப்பொருள். அனுராதா […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, காவ்யா, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேரா.கு.ஞானசம்பந்தன், பக். 368, விலை ரூ. 370. தமிழ் இலக்கண உலகிலும் இலக்கிய உலகிலும் பெரும்புலவராய்த் திகழ்ந்தவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இவர் தொல்காப்பிய பாயிர விருத்தி, அன்மொழித்தொகை ஆராய்ச்சி, நுண்பொருள் கோவை, நவமணிக்காரிகை நிகண்டு போன்ற இலக்கண ஆய்வு நூல்களையும், சிதம்பர விநாயகர் மாலை. திருவடிப் பத்து, மாலைமாற்று மாலை, இன்னிசை இருபது, வள்ளுவர் நேரிசை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களையும் இயற்றியுள்ளார். பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் […]

Read more
1 2 3 8