சிக்குவானா? சிக்குவாளா?
சிக்குவானா? சிக்குவாளா? , ஜோதிர்லதா கிரிஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.160; ரூ.125; சமூகக் கதைகளையும், குடும்பக் கதைகளையும் எழுதி வந்த ஜோதிர்லதா கிரிஜா, ஓர் அருமையான துப்பறியும் நாவலை எழுதியுள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் யார் கொலை செய்தது என்ற புதிர் வெளிப்படாமல் வெகு நேர்த்தியாக எழுதியுள்ளார். இன்ஸ்பெக்டர் மணவாளனும், சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணுவும் கொலைகாரன் யார் என்று எல்லா கோணங்களிலும் துப்பறிந்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள். கலாவதி என்கிற பெண் கொல்லப்படுகிறாள். இறந்த அவளின் மூடிக் கிடந்த கைகளில் இருந்த ஒரு பேனா […]
Read more