தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. 60 சுவை விருந்து பராசக்தியின் கா கா கா எள்ற பிரபல பாடல் ஷுட் செய்யும்போது காகங்களே கிடைக்கவில்லை. பிறகு எப்படி சமாளித்தார்கள்? ஏராளமான புறாக்களைப் படித்துக் கறுப்பு வண்ணம் பூசி… தமிழ்திரையுலகில் நாமறியாத பல விவரங்கள் பற்றி 2…3 டாக்டரேட் செய்யுமளவு ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கே.என்.சிவராமன். படிக்க ஆரம்பித்தால் சீழே வைக்க முடியவில்லை என்று ஒரு சம்பிரதாயத்துக்குச் சொல்வோம்தான். ஆனால் இந்த அடேயப்பா ரகப் புத்தகத்தில் உள்ள பிரமிப்பூட்டும் விஷயங்கள்… […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. அதிகாரம் ஈரோட்டில் இருக்கிறது! தேசப்பிதா மகாத்மா காந்தி, மோகன் தாஸ் ஆகப் பிறந்து 150ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பாபுஜியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிதளவேனும் அவரைப் பின்பற்ற முயல்கிறவர்களின் எண்ணிக்கை தான் நாளும் அருகிக்கொண்டே வருகிறது. முனைவர் இளசை சுந்தரம், பாபுஜியின் வாழ்க்கையிலிருந்து 200 அரிய நிகழ்வுகளைத் தொகுத்துப் பலாப்பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துத் தந்திருக்கிறார். ஒரு சமயம் பாபுஜியின் பவுண்டன் பேனா காணாமல் போய்விட்டது. […]

Read more

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது? இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]

Read more

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள்

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள், கல்கி, நிலா காமிக்ஸ், பக். 42, விலை 145ரூ. கல்கியின், பொன்னியின் செல்வன், ஐந்து தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமான, வரலாற்று நாவல்களின் சிகரம். அதை, இளைஞர்களும் முதியோரும் படித்திருப்பர். அதில் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட, மன்னர்களின் வீரம், தீரம், பக்தியை கண் முன் கொண்டு வந்திருப்பார் கல்கி. அதை சிறுவர்களுக்கான படக்கதையாக மாற்றி அருமையான படைப்பாக வெளியிட்டிருக்கிறது நிலா காமிக்ஸ். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், விலை ஐந்து பாகங்களும் சேர்த்து 2500ரூ. புதிய வடிவமைப்பில் பொன்னியின் செல்வன் கல்கியின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு, அவருடைய நூல்கள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவங்களில் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக கல்கியின் பிரம்மாணடமான வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லாப் பதிப்பங்களிலும் விதம் விதமான தோற்றங்களிலும், விலைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இந்த நாவலை, கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் வெளியிட்டுள்ளது. ஐந்து பாகங்களும் ஐந்து புத்தகங்களாக, ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கம் […]

Read more

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 60ரூ. திருட்டு, கொலை, கொள்ளை என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் திருத்துவதற்காக ஏற்பட்ட, சிறைச்சாலைக்குள்ளேயே குற்றங்கள் நிகழ்வதன் காரணம் என்ன என்று ஆராய்கிறது ஒரு கட்டுரை. ‘தங்கள் பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற வேகமும் கவலையும் கைதிகளிடம் இருக்கிறது. அதை யாரிடமும் கொட்ட வழியில்லாதபோது மனதுக்குள்ளேயே புழுங்கி ஆத்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு சிறைச் சாலையிலும் கவுன்ஸிலிங் அவசியம்’ என்கிறார் ஆசிரியர். காணாமல் போகும் பெண் குழந்தைகள் கருவறையா, […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. கல்கி குழுமத்தின் ‘தீபம்’ ஆன்மிக இதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. நீர்வளம் குன்றிய பாலாற்றின் கரையில் இத்தனை வரலாற்றுச் சிறப்புடைய கோயில்களா என்று பிரமிக்கப் பண்ணுகிற முப்பத்தொன்பது கட்டுரைகள். தரிசன நேரம், செல்லும் வழி போன்ற அவசியமான தகவல்களையும் கொண்ட நல்ல நூல். நன்றி: கல்கி, 3/12/2017.

Read more

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை, இரா. சம்பத், சாகித்திய அகாதெமி, பக். 224, விலை 110ரூ. 18 அறிஞர்களின் பயனுள்ள தொகுப்பு இன்றைக்கு அறுபதைக் கடந்து நிற்பவர்களை அந்தக் காலத்தில் கிறங்க அடித்த பல திரையிசைப் பாடல்களுள் ஒன்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல். இதுபோன்ற பல பாடல்களுக்கு இறவா வரம் தந்தவர் கவி.மு.ஷெரீப். மகாபாரத பீஷ்மரின் தியாகத்தைப் போற்றுகிற ‘மச்சகந்தி’, ‘பல்கீஸ் நாச்சியார் காவியம்’ ஆகிய காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அரசியல், மொழியியல் என்று கவிதைக்கு அப்பாலும் பல துறைகளில் தம்மை […]

Read more

நீயும் நானும்

நீயும் நானும், கோபால்தாசன், ஆரம் வெளியீடு, பக். 138, விலை 100ரூ. கவிதையில் நெய்த கதை! காதலைக் கவிதையில் சொல்லுவர், இவரோ கவிதையில் ஒரு இனிய காதல் கதையைத் தருகிறார். இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். எளிய தமிழ் நடையில் யதார்த்தமான பின்னணியில் சென்னைக் காதலின் மணம் வீசுகிறது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது. எளிய நடையில் வழக்கத்தில் உள்ள சென்னைத் தமிழ் மற்றும் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பது, இப்புத்தகம் அனைவரும் படித்து இன்புறக்கூடிய ஒன்று என்று […]

Read more

வங்க மொழிச் சிறுகதைகள்

வங்க மொழிச் சிறுகதைகள், (தொகுப்பு 3), அஷ்ரு குமார் சிக்தார், சாகித்திய அகாதெமி, விலை 400ரூ. அரிவாள் மணையில் நறுக்கிய மீன் பாரத தேசத்தில் வளமான இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்ததில் வங்கமொழிக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட இடமும் பெருமிதமும் உண்டு. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு அந்தப் பெருமிதத்துக்குச் சான்று பகிர்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு சிறுகதைகளையும் எழுதியவர்கள் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்கிறது முன்னுரை. பெரும்பாலும் பாரதம் விடுதலை பெற்ற சமயத்தில் வங்காளம் இருந்த அவலமான நிலையைப் […]

Read more
1 2 3 12