சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை குறித்து வானொலி தொகுப்பாளினியான சின்ரன் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சீனப் பெண்களின் நிலை குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

மார்க்ஸ் எப்படி இருப்பார்?

மார்க்ஸ் எப்படி இருப்பார்?, எஸ்.தோதாத்ரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.120. 2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் கொண்டிருந்த ஆழமான காதல் என முதல் நான்கு கட்டுரைகள் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றியவையாக உள்ளன. மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த அவருடைய […]

Read more

கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, ஆனி பிளாரன்ஸ் (எ) பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 160ரூ. குழந்தைகளிடம் இயற்கையாகவே இருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை அவர்களிடம் உருவாக்குவது குறித்து அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

பெரியாழ்வார்

பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்ககாலத்திலேயே அறியப்பட்டாலும் நாயன்மார், ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. அதிலும் பன்னிரு ஆழ்வார்களின் படைப்புகள் திருமாலின் பெருமையைப் பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர். அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் […]

Read more

அகக்கண்களால் இறைவனை தரிசித்த சித்தர்கள்

அகக்கண்களால் இறைவனை தரிசித்த சித்தர்கள், ஞானத் திருக்கோவில், விலை 125ரூ. அகத்தியர், போகர், இடைக்காடர், திருமூலர் முதலான 18 சித்தர்கள் பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததாக புராணங்களிலும், வரலாறுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில், காகபுகண்டர், சிவவாக்கியர் ஆகியோர் பற்றி இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் வரலாற்றையும், ஆசிரியர் முனைவர் சிவ.ஜ.வேழவேந்தன் சுவாமிகள் சுவையான பல தகவல்களை விவரித்துள்ளார். எந்த நாளில் உருவாகும் குழந்தை எப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்கும் என்பது, ‘குழந்தை வரம் வேண்டி சித்தர்கள் அருளிய குறிப்பு’ என்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள்

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.190. சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர் நாதபிரம்மமான தியாகராஜர். இவர் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை உருவாக்கி இருக்கிறார். இக்கீர்த்தனைகள் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. தியாகய்யாவின் நாதோபாசனையானது தம்பூராவை மீட்டி கைத்தாளம் போட்டு இக்கீர்த்தனை, இந்த ராகம், அந்த தாளம் என்று பகுப்பாய்வு செய்து பாடும் முறையன்று. மாறாக, தெய்வீக கீர்த்தனைகள் மூலம் பஞ்ச பூதங்களும் மற்றும் பிராகிருதியின் செயல்களை அடக்கி வைக்கும் முறையே நாதோபாசனை ஆகும். இந்த நாதோபாசனை முறையில் இறைவனை வழிபட்டவரே […]

Read more

தேர்தல் வழிகாட்டி,

தேர்தல் வழிகாட்டி, வி. சிதம்பரநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. சோழர் காலத்திலேயே தேர்தல் முறை இருந்தது. காலத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் ஊரக, உள்ளாச்சி தேர்தல்கள் நடைபெற இருப்பதால், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் வி.சிதம்பரநாதன். வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள், மனுவை வாபஸ் பெறுதல், சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்கு எண்ணிக்கை பற்றிய விதிமுறைகள்… இப்படி வாக்காளர்களும், வேட்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் இப்புத்தகத்தில் […]

Read more

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), […]

Read more

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 75ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். இந்நூல் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு. ‘பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடச் சொன்னாயே பாரதி… நோட்டுத் திறமல்லவா இந்த நாட்டை நடத்துகிறது‘ என்று இன்றைய நாட்டு நடப்பைத் தோலுரித்துக் காட்டுகிறார். ‘தேடுதல் இல்லா வாழ்க்கையில் யார்க்கும் தெய்வ தரிசனம் கிடைப்பதில்லை’ ‘விதைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருங்காலம் ஒரு விருட்சத்தை இழந்துவிடும்’ போன்றவை நெஞ்சில் விழிப்புணர்வை விதைக்கின்றன. ‘பிள்ளை மனமும் […]

Read more

வரலாறு உணர்த்தும் அறம்

வரலாறு உணர்த்தும் அறம், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதற்கான பலவித வழிமுறைகளை இந்த நூல் மூலம் நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். வரலாறு என்பது என்ன? எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது? எவற்றையெல்லாம் வரலாறு வசதியாக மறந்து விடுகிறது என்பதை விரிவாக ஆராயும் நூல். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ.இறையன்பு இதை எழுதியுள்ளார். போரின் போதும் மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளில் இருந்தும் எது அறம் […]

Read more
1 2 3 8