அகக்கண்களால் இறைவனை தரிசித்த சித்தர்கள்
அகக்கண்களால் இறைவனை தரிசித்த சித்தர்கள், ஞானத் திருக்கோவில், விலை 125ரூ.
அகத்தியர், போகர், இடைக்காடர், திருமூலர் முதலான 18 சித்தர்கள் பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததாக புராணங்களிலும், வரலாறுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில், காகபுகண்டர், சிவவாக்கியர் ஆகியோர் பற்றி இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
அவர்களின் வரலாற்றையும், ஆசிரியர் முனைவர் சிவ.ஜ.வேழவேந்தன் சுவாமிகள் சுவையான பல தகவல்களை விவரித்துள்ளார். எந்த நாளில் உருவாகும் குழந்தை எப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்கும் என்பது, ‘குழந்தை வரம் வேண்டி சித்தர்கள் அருளிய குறிப்பு’ என்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 10/1/2018.