சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு, தியாக சத்தியமூர்த்தி, சிவகாமி பதிப்பகம், விலைரூ.250 இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கோவில்களும் போராட்ட மையங்களாக விளங்கியுள்ளன. விடுதலை தாகத்தால் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய தியாகி தியாகராஜன் வாழ்க்கை வரலாற்றை, தொல்லியல் அறிஞர் தியாக சத்தியமூர்த்தி ஆங்கிலத்தில் தொகுப்பு நுாலாகப் படைத்துள்ளார். தமிழில், வகுளா வரதராஜன் மொழி பெயர்த்துள்ளார். எளிய நடையில், நேரடியாக பேசுவது போல் அமைந்துள்ளது. தியாகி தியாகராஜனின் 88 ஆண்டு கால வாழ்க்கையை அவர் எழுதிய குறிப்புகளில் இருந்து, […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.500 இரண்டாம் உலக யுத்தத்தை கண்முன் நிறுத்தும் நுால். வரலாற்று பின்னணியுடன் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. யுத்தம் துவங்குவதற்கு முன், ஐரோப்பிய நாடுகளில் நிலவிய நெருக்கடிச் சூழலுடன் துவங்குகிறது. எட்டு பெரிய அத்தியாயங்களில், துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இரண்டாம் அத்தியாயம், போர் துவக்க நிகழ்வை தெரிவிக்கிறது. போரின் போக்கு, ஏற்ற இறக்கங்கள், நாடுகளின் போர் தந்திரம், ஆயுதப்பயன்பாடு, அவற்றால் ஏற்பட்ட விளைவு என, போரின் துயர வரலாற்றை மிக நுட்பமாக படம் பிடிக்கிறது. போரின் […]

Read more

காந்தி என்கிற காந்தப்புலம்

காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.138. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் […]

Read more

மருதநாயகம் என்ற மர்மநாயகம்

மருதநாயகம் என்ற மர்மநாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.300. ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர். தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் […]

Read more

தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும்

தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும், ச.சீனிவாசன்; பாலாஜி இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 164, விலை ரூ.200. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களாகக் கருதப்படும் அருந்ததியர் சமூகத்தின் வரலாற்றைக் கூறும் நூல். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை அருந்ததியர் பேசுவதால் அவர்கள் அந்த மொழிபேசும் நிலப்பகுதியைச்சேர்ந்தவர்கள் அல்லர்; அவர்கள் தமிழ்நாட்டின் ஆதி குடிகள் என்று இந்நூல் கூறுகிறது. அதற்கான ஆதாரங்களையும் முன் வைக்கிறது. இதுவரை எழுதப்பட்ட வரலாறு ஆதிக்க சக்திகளின் வரலாறாகவே உள்ளது. அடித்தட்டு மக்களின் வரலாற்றை மக்களின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டுகள், கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், […]

Read more

சுக்கா… மிளகா… சமூக நீதி?

சுக்கா… மிளகா… சமூக நீதி? , ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு,  மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512.  விலைரூ.500,  இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், விலைரூ.500 அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால். மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது. மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் […]

Read more

அழகிய மரம்

அழகிய மரம், தரம்பால், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்குப் பதிப்பகம், மொத்த விலை: ரூ.900. ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.312, விலை ரூ.250. தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிர்ந்துள்ளார் […]

Read more
1 2 3 4