மீண்டும் ஒரு தொடக்கம்

மீண்டும் ஒரு தொடக்கம், வளவ.துரையன், சந்தியா பதிப்பகம், பக். 128, விலை ரூ.125. பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலாசிரியர், தனது 16 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்தச் சிறுகதைகள் தினமணி கதிர் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவை. தனது வாழ்வில் நேரிட்ட அனுபவங்களைப் பெரும்பாலும் கதை வடிவமாக்கி இருப்பதாக முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க கிராமத்து பேச்சு நடையில் விறுவிறுப்பாகச் செல்கிறது. கதையின் தொடக்கத்தில் இருந்து, முடிவு வரை ஒவ்வொரு கதையும் சலிப்புத் தட்டாமல் செல்கிறது. வாழ்க்கை […]

Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், வழக்கறிஞர் சுமதி, சந்தியா பதிப்பகம், பக்.192, விலை ரூ.200. வெகுஜன மாத இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தொழில் ரீதியாக தான் கண்டவற்றை 27 தலைப்புகளில் கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரியும் நிலையில், பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர்; குடிகாரக் கணவனால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம்; வயதான தாய்-தந்தையை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்; தற்கொலை செய்து கொள்ள நினைப்போர்; தாய்-தந்தை பேச்சைக் கேட்டு கணவனை விட்டுப் பிரியும் பெண்களின் நிலைமை; கட்டாயத் […]

Read more

உள்ளம் படர்ந்த நெறி

உள்ளம் படர்ந்த நெறி,  கோவை எழிலன், சந்தியா பதிப்பகம், பக்.200, விலை  ரூ.200.  தான் ரசித்துப் படித்த ஓர் இலக்கியக் காட்சியை நண்பர்கள் குழுவில் தினமும்பதிவிட்டதன் பயனாக உருவாகியிருக்கிறது இந்தத்தொகுப்பு. மொத்தம் நூற்று ஐம்பது காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே இலக்கியக் கடலில் கண்டெடுத்த முத்துக்கள் என்றே கூறலாம். கம்பராமாயணம், யுத்தகாண்டத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடலுடன் தொடங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வோர் இலக்கியக் காட்சியாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர். சீர்காழி திருப்பதியின் வருணனை, இராவணனை நற்பண்புள்ளவனாகக் காட்டும் பாவேந்தரின் பாடல், முழுமதி கிரகண நாளில் […]

Read more

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை, சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 250 சிந்துவெளி நாகரிகம் நம் கவனத்தில் பட ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நூறாண்டுகளில் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகளும் மிகத் தீவிரமாகக் களத்தில் முன்நிற்கின்றன. வடமொழியும் அதன் வேதங்களும் ஆட்சி செலுத்தும் முன்பே இந்த மண்ணில் நிலவிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்பதை நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக சமீபத்திய கீழடி […]

Read more

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன்

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன், விளக்க உரை, சு. சிவபாதசுந்தரனார், சந்தியா பதிப்பகம்,  பக்.238,  விலை ரூ.225.   சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பது போலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்களுள் நான்காமவரான உமாபதி சிவாச்சாரியார், “மெய்கண்ட சாத்திரம்’ என்று கூறப்படும் பதினான்கு நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். “சித்தாந்த அட்டகம்’ எனப்படும் அவற்றுள் ஒன்றுதான் “திருவருட்பயன்’. இந்நூலுக்கு சைவ அறிஞர் இலங்கை சு. சிவபாதசுந்தரனார் எழுதிய உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது திருக்குறளைப் போலவே குறள் வெண்பா […]

Read more

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள்

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள், இரா.நாறும்பூநாதன், சந்தியா பதிப்பகம், பக். 270, விலை ரூ.270. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்ணின் சிறப்புகள் பற்றிய 41 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முதல் குற்றால குறவஞ்சி வரை தெரிந்த விஷயங்கள் பற்றிய தெரியாத விவரங்களை சுவாரசியமாகத் தந்திருப்பது சிறப்பு. தஞ்சையில் பிறந்து திருநெல்வேலிக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்கு கல்விக் கொடையளித்த கிளாரிந்தா, ஆசியாவிலேயே பெரிய கண் பார்வையற்றோர் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கிய ஆஸ்க்வித் ஆகியோரின் வரலாறு, நெல்லைச் சீமையில் 19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட […]

Read more

காந்தி என்கிற காந்தப்புலம்

காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.138. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் […]

Read more

நிலைகெட்ட மனிதர்கள்

நிலைகெட்ட மனிதர்கள், க.முத்துக்கிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், பக்.168, விலை ரூ.170. சினிமா, அரசியல், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளும் எவரொருவரையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இத்துறைகளில் பேரும் புகழும் ஈட்டுவது எளிதல்ல. கடும் உழைப்பும் முயற்சியும் இருந்தாலொழிய வெற்றி பெற இயலாது. ஆனாலும் எவ்வித அடிப்படை அறிவும் புரிதலும் இல்லாத சிலர் இத்துறைகளில் கோலோச்சுவது மட்டுமல்லாது கோடிக்கணக்கில் பணமும் ஈட்டுகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது. அப்படியானவர்களைப் பகடி செய்து புனையப்பட்ட நாவல்தான் ‘நிலைகெட்ட மனிதர்கள்’. மளிகை மண்டி முதலாளி, அவருடைய வேலைக்காரன், மளிகை […]

Read more

என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.   இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி […]

Read more

நேமிநாதம் காலத்தின் பிரதி

நேமிநாதம் காலத்தின் பிரதி, நா.அருள்முருகன், சந்தியா பதிப்பகம், பக்.232, விலை ரூ.230. தொல்காப்பியத்திற்குப் பிறகு இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சமணரான குணவீர பண்டிதரால் எழுதப்பட்ட நேமிநாதம். “நேமிநாதம் குறித்து ஓரிரு நூல்கள் வந்திருந்தாலும் அவை உள்ளடக்கம், ஒப்பீடு அளவிலேயே நின்றுவிட்டன. நேமிநாதத்தைத் தனியொரு பனுவலாகக் கொண்டு அதன் கொடுக்கல் வாங்கல் பற்றி முழுமையான சிந்தனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்ற நூலாசிரியரின் மனக்குறை, இந்த ஆய்வின் மூலம் ஓரளவு தீர்ந்திருக்கிறது. நேமிநாதத்தின் இலக்கண வெளிப்பாடு, நேமிநாதத்துக்கும் வீரசோழியத்துக்கும் இடையேயான வேறுபாடுகள், நேமிநாதம் […]

Read more
1 2 3 11