ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம்

ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம், ராவ்சாஹேப் கஸ்பே, தமிழில்: சுந்தரசோழன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.195. அம்பேத்கரிய ஆய்வாளர் டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே ஆர்.எஸ்.எஸ்ஸின் கோட்பாட்டு அடிப்படைகளை விளக்கும் விதமாகவும் அதன் சித்தாந்தத்தை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தும் விதமாகவும் மராத்தியில் எழுதிய ‘ஜோட்’ என்னும் நூல் ஏழு பதிப்புகள் கண்டுள்ளது. 2019-ல் வெளியான இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ராவ்சாஹேப் புதிதாக எழுதிச் சேர்த்த பகுதிகளையும் இணைத்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து, 14/5/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d/ இந்தப் புத்தகத்தை […]

Read more

தமிழ் இந்தியா

தமிழ் இந்தியா, ந.சி.கந்தையா பிள்ளை, சங்கர் பதிப்பகம், விலைரூ.275 தமிழர்களின் நாகரிகம், இந்தியாவின் பழைய நில அமைப்பு பற்றிய புகழ் வாய்ந்த நுால்.சிந்து சமவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் 1921ல் கண்டறியப்பட்டன. அங்கு கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்து, அங்கு வாழ்ந்தோர் தமிழர்கள் என்றும், அவர்கள் நாகரிகம், மெசபடோமியா எகிப்து பழைய நாகரிகங்களை ஒத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். புத்தருக்குப் பின் இந்திய அரசாங்க அமைப்பு, தத்துவ சாஸ்திரிகள், பாடலிபுத்திரம் போன்றவை குறித்தும் சொல்கிறார். தமிழ்மொழியில் வெளிவராத பல அரிய செய்திகள் அடங்கிய கருத்துக் […]

Read more

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம்

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம், சக்திதாசன் சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை:ரூ.400. கம்ப ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும், அவற்றுக்கு, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான விளக்கமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஒவ்வொரு பாடலிலும் உள்ள அருஞ்சொற்களுக்கு விளக்கமும் தந்து இருப்பதால் பாடலின் முழுக் கருத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. புத்தகத்தின் முன்னுரையாக, கம்பர் காலம் எது? அவரது சொந்த ஊர் எங்கே இருந்தது? ராமாயண காவியத்தை கம்பர் இயற்றியது ஏன்? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய பெரிய கட்டுரை ஆராய்ச்சி நோக்கில் தரப்பட்டு […]

Read more

தேசம் நேசித்த தலைவன்

தேசம் நேசித்த தலைவன், ஆதலையூர் சூரியகுமார், தாமரை பிரதர்ஸ் பீடியா,  விலை:ரூ.240. ஆயுதத்தின் துணையோடு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் களமாடிய வீரர் தேசம் நேசித்த தலைவன் சந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பு என்ற அளவில் அமைக்காமல், முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தையும் தனித் தனித் தலைப்புகளில் கொடுத்து இருப்பதால் இந்த நூலை ஆர்வத்துடன் படிக்க முடிகிறது. நேதா ஜியின் இளமைக்கால வாழ்க்கை, வெளிநாடு சென்று கல்வி கற்றது. இந்தியாவுக்கு வந்து […]

Read more

மகாத்மாவும் மருத்துவமும்

மகாத்மாவும் மருத்துவமும்,  தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை: ரூ.95. மருத்துவத்துக்கும் காந்திக்குமான உறவையும் அதில் அவருடைய ஈடுபாட்டையும் விளக்கும் வகையில், மருத்துவத் துறை நிபுணர்கள், காந்தியர்கள் உள்ளிட்டோர் எழுதிய 20 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. காந்தியரும் சமூகச் செயல்பாட்டாளருமான மறைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் இந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 9-4-22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

அன்பின் வழியது உயிர்

அன்பின் வழியது உயிர் (லியோ டால்ஸ்டாய் சிறுகதைகள்), ஜெ.நிர்மலா, மாசிலாள் பதிப்பகம், பக்.116, விலை ரூ.150. ரஷிய இலக்கியத்தின் மாபெரும் ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நுகர்வுக் கலாசாரத்தில் மறந்துபோன, மரத்துப்போன மனித நேய மதிப்பீடுகளை மறுபதிவு செய்ய வேண்டும் என்ற நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக கதைத் தேர்வுகள் அமைந்துள்ளன. நன்னயம் செய்துவிடல்’ என்ற கதையில், செய்யாத கொலைக்கு இவான்அக்செனோவ் என்பவன் தண்டிக்கப்பட்டு சைபீரியச் சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு, உண்மையான குற்றவாளி மக்கர் செமனீச் என்பவனை காண […]

Read more

சங்ககாலச் செங்கண்மா மூதூர்

சங்ககாலச் செங்கண்மா மூதூர், க.மோகன்காந்தி, பாரதி புக் ஹவுஸ், விலைரூ.170. தமிழர் பண்பாட்டு சிறப்பை கூறும் 16 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செங்கம் பகுதியை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நன்னன் சேய் நன்னனின் சிறப்பு, நாட்டு வளம், செய்யாறு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. செங்கம் என்ற பகுதி அப்போது, ‘செங்கண்மா’ என வழங்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நுாலான மலைபடுகடாம், நன்னனின் சிறப்புகளை கூறுவதையும் தெளிவுபடுத்தி உள்ளது. சங்க காலத்தின் சமூக நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும், சங்க கால பொருளாதார நிலையைக் […]

Read more

இலக்கியச்சாரல்

இலக்கியச்சாரல், துருவன், மலர் மகள் பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் இலக்கியம், சமயம் சார்ந்த விவகாரங்கள், தற்போதைய சமுதாயத்தில் காணப்படும் சீர்கேடுகள் ஆகிய பல கருத்துகளை மையமாகக் கொண்டு 50 கட்டுரைகளைப் படைத்து இருக்கிறார், ஆசியர். ஒவ்வொரு கட்டுரையிலும் அவரது தமிழ்ப் புலமை பளிச்சிடுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/7/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எங்க வாத்தியார்

எங்க வாத்தியார்,  கொற்றவன், வானதி பதிப்பகம், பக். 728, விலை ரூ.500. முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 29 பேரிடம் பேட்டி கண்டு, நூலாசிரியர் அதை பிரசுரம் செய்துள்ளார். கடையெழு வள்ளல்கள் இருந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், நம்காலத்தில் அவர்களுக்கு இணையாக வாழ்ந்த வள்ளலாக, […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர். இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு […]

Read more
1 2 3 23