சங்ககாலச் செங்கண்மா மூதூர்

சங்ககாலச் செங்கண்மா மூதூர், க.மோகன்காந்தி, பாரதி புக் ஹவுஸ், விலைரூ.170.

தமிழர் பண்பாட்டு சிறப்பை கூறும் 16 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செங்கம் பகுதியை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நன்னன் சேய் நன்னனின் சிறப்பு, நாட்டு வளம், செய்யாறு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

செங்கம் என்ற பகுதி அப்போது, ‘செங்கண்மா’ என வழங்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நுாலான மலைபடுகடாம், நன்னனின் சிறப்புகளை கூறுவதையும் தெளிவுபடுத்தி உள்ளது. சங்க காலத்தின் சமூக நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது.

மேலும், சங்க கால பொருளாதார நிலையைக் காட்டும் போது, முன்னோர் சேமித்த செல்வம் இருந்தாலும், உழைப்பால் வந்த செல்வத்தை மதித்துள்ளனர் என்ற செய்தி சுவாரசியமானது. பண்டமாற்று முறை, மற்ற நாடுகளுடன் தமிழர்கள் வைத்திருந்த வணிப தொடர்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது. கட்டுரைகளில் துணை சேர்க்கும் வகையில் படங்களும், சான்றுப் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழர் வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிய உதவும் நுால்.

– முகில் குமரன்

நன்றி: தினமலர், 6/3/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032958_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *